Homeசெய்திகள்அரசியல்கலைஞருக்கு முரசொலி மாறன்; மு.க.ஸ்டாலினுக்கு முரசொலி செல்வம் மனசாட்சியாக இருந்தார்- திருமா பேட்டி

கலைஞருக்கு முரசொலி மாறன்; மு.க.ஸ்டாலினுக்கு முரசொலி செல்வம் மனசாட்சியாக இருந்தார்- திருமா பேட்டி

-

- Advertisement -

கலைஞருக்கு முரசொலி மாறன் மனசாட்சியாக இருந்தது போல முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மனசாட்சியாக இருந்தார் முரசொலி செல்வம் என விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி

மறைந்த முரசொலி செல்வன் உடலுக்கு விசிக தலைவர் திருமாவளவன் நேரில் அஞ்சலி செலுத்திய பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர்,

முரசொலி செல்வம் மறைவு தமிழக அரசியலிலும் பத்திரிகை உலகிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தமிழக அரசியலில் குறிப்பாக திமுக அரசியலில் நன்கு அறியப்பட்டவர். கலைஞருக்கு முரசொலி மாறன் மனசாட்சியாக இருந்தது போல தளபதி ஸ்டாலினுக்கு முரசொலி செல்வம் மனசாட்சியாக இருந்தார்.

முரசொலி மாறன் மறைந்த போது கலைஞர் எப்படி பெரும் பாதிப்புக்கு உள்ளானாரோ துயரத்தில் ஆழ்ந்தாரோ அதேபோல முரசொலி செல்வத்தை இழந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் மிகுந்த துயரத்தில் புழங்குகிறார்கள். அந்த அளவுக்கு திமுகவுக்கு, திமுகவின் பாதுகாப்பில் மிகப்பெரிய பங்களிப்பை செய்தவர் முரசொலி செல்வம்.

பிரபல பத்திரிகையாளர் முரசொலி செல்வம் காலமானார்: தலைவர்கள் இரங்கல்

வெற்றி கரமாக பத்திரிக்கையை நடத்தியதோடு மட்டும் இல்லாமல் தொடர்ந்து அரசியல் விமர்சன கட்டுரைகளையும் எழுதி வந்தவர். இதனால் அதிமுக ஆட்சிக்காலத்தில் சட்டசபை குறித்த செய்தியை வெளியிட்டதற்காக தண்டனைக்குட்படுத்தப்பட்டார். ஆனாலும் துணிந்து விடாமல் தொடர்ந்து தன்னுடைய அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தார்.

முரசொலி சிலம்பு என்கிற பெயரில் அவர் எழுதிய கட்டுரைகள் எதிர் தரப்பாருக்கு பெரிய சவாலாக விளங்கியது. அந்த அளவுக்கு உலக அளவில் அரசியல் புரிதலை பெற்றிருந்தவர். மிசா காலத்தில் திமுகவும் திமுக தலைவரும் சந்தித்த நெருக்கடிகளில் இவருக்கும் பங்கு உண்டு.

அவருடைய இழப்பு திமுகவுக்கும் ஊடக உலகத்தினருக்கும் பெரும் இழப்பு. அவரை இழந்து வாடுகிற குடும்பத்தினருக்கு திமுகவினருக்கும் விசிக சார்பில் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம் என திருமா கூறினார்.

MUST READ