Homeசெய்திகள்அரசியல்சிபிஐ தவறாக பயன்படுத்தப்படுகிறது - கார்கே

சிபிஐ தவறாக பயன்படுத்தப்படுகிறது – கார்கே

-

- Advertisement -

சிபிஐ தவறாக பயன்படுத்தப்படுகிறது – கார்கே

எதிர்க்கட்சி தலைவர்கள் சிபிஐ-யை தவறாக பயன்படுத்துவதன் மூலம், ஜனநாயகத்தை படுகொலை செய்யும் முயற்சிகளை மோடி அரசு மேற்கொண்டு வருவதாக, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே குற்றம் சாட்டி உள்ளார்.

டெல்லியில் உள்ள பீகார் துணை முதலமைச்சர் உள்ள தேஜஸ்வி யாதவ் தொடர்பான சொத்துக்கள் மற்றும் அவரது சகோதரி வீடுகளிலும், அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டு வருகிறது. சில நாட்களுக்கு முன்பு லல்லு பிரசாத்திடம் சிபிஐ விசாரணை நடத்தியது.

தேஜஸ்வியின் சகோதரி மற்றும் அவரது சகோதரரின் கர்ப்பிணி மனைவி ஏஜென்சியால் சித்ரவதை செய்யப்பட்டிருந்ததாக குற்றம் சாட்டிய நிலையில், கடந்த 15 மணி நேரத்துக்கும் மேலாக தேஜஸ்வி யாதவின் இல்லத்தில் அமலாக்கத்துறை அமர்ந்துள்ளதாக மல்லிகார்ஜூனா கார்கே குற்றம் சாட்டி உள்ளார்.

மோடி அரசு மனிதாபிமானம் காட்டவில்லை என குற்றம் சாட்டியுள்ள மல்லிகார்ஜூனா கார்கே, தப்பி ஓடியவர்கள் கோடிக்கணக்கில் எடுத்து கொண்டு நாட்டிலேயே இல்லாமல் சென்றாலும், அவர்கள் மீது மோடி அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், ஏன் இது தொடர்பாக விசாரணை நடத்தவில்லை எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

MUST READ