spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்விளையாட்டுவரலாற்றில் முதல்முறை....அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது ஆப்கானிஸ்தான் அணி!

வரலாற்றில் முதல்முறை….அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது ஆப்கானிஸ்தான் அணி!

-

- Advertisement -
kadalkanni

சூப்பர் 8 சுற்றில் வங்கதேச அணியை வீழ்த்திய ஆப்கானிஸ்தான் அணி டி20 உலக கோப்பை வரலாற்றில் முதல் முறையாக அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

இன்று நடைபெற்ற சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் வங்காளதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டி மேற்கிந்திய தீவுகளில் உள்ள ஆலன் வாலே மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ரஷித் கான் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து ஆப்கானிஸ்தான் அணி முதலாவது பேட்டிங் விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரஹமதுல்லா குர்பாஸ் 43 ரன்களிலும், இப்ராஹிம் சட்ரன் 18 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். இறுதியில் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழந்து 115 ரன்கள் எடுத்தது.

இதனையடுத்து 116 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி தொடக்கத்தில் அதிரடி காட்டினாலும், இறுதியில் சொதப்பியது. அந்த அனியில் லிட்டன் தாஸ் மட்டுமே கடைசி வரை தனி ஆளாக போராடிய நிலையில், மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். மழை காரணமாக போட்டி 19 ஓவர்களாக குறைக்கப்பட்ட நிலையில், இலக்கு 114 ரன்களாக நிர்ணயிக்கப்பட்டது. இந்த நிலையில், வங்க தேச அணி 17.5 ஓவர்களில் 105 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் ஆப்கானிஸ்தான் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதி சுற்றுக்கு சென்றது. டி20 உலக கோப்பை வரலாற்றில் ஆப்கானிஸ்தான் அணி அரையிறுதி சுற்றுக்கு செல்வது இதுவே முதல்முறை ஆகும்.

MUST READ