- Advertisement -
பிசிசிஐ தேர்வுக்குழு தலைவர் சேத்தன் ஷர்மா தனது பதவியை ராஜினாமா செய்தார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் புதிய தேர்வுக்குழு தேர்வு செய்ய அறிவிப்பு வெளியான நிலையில், ஜனவரி மாதம் சேத்தன் சர்மா தலைமையிலான குழு பதவியேற்றது. இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவராக 2வது முறையாக, நியமிக்கப்பட்ட 2வது மாதத்திலேயே பதவியை சேத்தன் சர்மா ராஜினாமா செய்தார். இந்திய அணி தொடர்பான பல ரகசியங்களை சேத்தன் சர்மா கசியவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் ராஜினாமா செய்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சி நடத்திய ஸ்டிங் ஆபரேஷனில், கங்குலி, கோலி உள்ளிட்டோர் குறித்த பிசிசிஐ ரகசியங்கள் குறித்து சேத்தன் ஷர்மா பேசிய விசயங்கள் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. கடந்த மாதம் இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவராக சேத்தன் சர்மா மீண்டும் தேர்வானார் என்பது குறிப்பிடதக்கது.