spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்விளையாட்டுமைதானத்தில் மயங்கி விழுந்த உருகுவே கால்பந்து வீரர் உயிரிழப்பு

மைதானத்தில் மயங்கி விழுந்த உருகுவே கால்பந்து வீரர் உயிரிழப்பு

-

- Advertisement -

போட்டியின்போது மைதானத்தில் மயங்கி விழுந்த உருகுவே கால்பந்து வீரர் ஜுவான் ஸ்கியர்டோ உயிரிழந்துள்ளார்.

தென் அமெரிக்க கண்ட கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையிலான கோபா லிபர்டடோர்ஸ் கால்பந்து தொடரில் கடந்த 22ம் தேதி நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பிரேசிலின் சாவ் பாலோ மற்றும்  உருகுவேயின் கிளப் நேஷனல் டி கால்பந்து அணிகள் மோதின.

we-r-hiring

இந்த ஆட்டத்தின் 84வது நிமிடத்தில் கிளப் நேஷனல் டி க ல்பந்து அணியின் தடுப்பாட்டக்காரர் 27 வயதான  ஜுவான் ஸ்கியர்டோ திடீரென மைதானத்தில் சுருண்டு விழுந்தார். இதனை அடுத்து அவர் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். மருத்துவ பரிசோதனையில் ஜுவானுக்கு ஒழுங்கற்ற இதயத்துடிப்பு ஏற்பட்டதால் அவர் மயங்கியது தெரியவந்தது.

இந்நிலையில் பிரேசில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜுவான் ஸ்கியர்டோ சிகிச்சை பலனின்றி உயிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கிளப் நிர்வாகம் வெளியிட்ட பதிவில், தங்கள் இதயங்களில் ஆழ்ந்த வலி மற்றும் தாக்கத்துடன்,  ஜுவான் ஸ்கியர்டோவின் மரணத்தை அறிவிப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

MUST READ