spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுகோவை விமான நிலையத்தில் ரூ.1 கோடி கஞ்சா பறிமுதல்!

கோவை விமான நிலையத்தில் ரூ.1 கோடி கஞ்சா பறிமுதல்!

-

- Advertisement -

தாய்லாந்தில் இருந்து கோவைக்கு விமானத்தில் கடத்திவரப்பட்ட ரூ.1 கோடி மதிப்பிலான கஞ்சாவை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

we-r-hiring

சிங்கப்பூரில் இருந்து கோவை வரும் விமானத்தில் கஞ்சா கடத்தி வருவதாக விமான நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் நேற்று முன்தினம் சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு வந்த விமானத்தில் பயணம் செய்தவர்களையும், அவர்களது உடமைகளையும் சுங்க அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது, பயணி ஒருவரின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டதால் அவரது உடைமையை தீவிரமாக சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, கார்ன் பிளேக்ஸ் பாக்கெட்களில் மறைந்து வைத்து கஞ்சாவை கடத்திவந்தது தெரியவந்தது. இதனை அடுத்து, சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த சுங்க அதிகாரிகள், இது தொடர்பாக பயணியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

MUST READ