Homeசெய்திகள்தமிழ்நாடுஒளிமயமான எதிர்காலம் பிறக்கும் என்ற நம்பிக்கையுடன்... அன்புமணி ராமதாஸ் புத்தாண்டு வாழ்த்து

ஒளிமயமான எதிர்காலம் பிறக்கும் என்ற நம்பிக்கையுடன்… அன்புமணி ராமதாஸ் புத்தாண்டு வாழ்த்து

-

ஒளிமயமான எதிர்காலம் பிறக்கும் என்ற நம்பிக்கையுடன் ஆங்கிலப் புத்தாண்டு பிறப்பை கொண்டாடும் சொந்தங்கள் அனைவருக்கும் இதயங்கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்து செய்தியில், “புத்தாண்டு பிறப்பு என்பது ஆண்டுக்கு ஒரு முறை வழக்கமாக வந்து போகும் நிகழ்வல்ல. ஒவ்வொரு ஆண்டும் மனிதகுலத்தின் மனதில் புத்துணர்வையும், புது நம்பிக்கையையும் விதைப்பதற்கான உன்னத திருநாள் ஆங்கிலப் புத்தாண்டு ஆகும். ஓராண்டில் ஆயிரமாயிரம் ஏமாற்றங்கள், வருத்தங்கள், கவலைகள் இருந்தாலும், அவை அனைத்தையும் நாட்காட்டியுடன் சேர்த்து ஒதுக்கி வைத்து விட்டு, புதிதாக பிறக்கப் போகும் ஆண்டில் எத்தனை சவால்கள் வந்தாலும் அவற்றை துணிச்சலுடன் எதிர்த்து நின்று வீழ்த்தும் நம்பிக்கையையும், உத்வேகத்தையும் நமக்கு அளிப்பது புத்தாண்டு தான். அதை எவரும் மறுக்க முடியாது.

தமிழ்நாட்டில் மட்டுமின்றி, ஒட்டுமொத்த உலகமும் கடந்த சில ஆண்டுகளாக அடுத்தடுத்து நெருக்கடி மற்றும் பின்னடைவுகளையே சந்தித்து வருகிறது. வேலைவாய்ப்பு, சமூகப் பாதுகாப்பு, அடிப்படை உரிமைகள் உள்ளிட்ட விஷயங்களில் தமிழகத்தின் உரிமைகள் தொடர்ந்து பறிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையை மாற்றி தமிழகத்திற்கு அனைத்து உரிமைகளும் கிடைக்க வகை செய்ய வேண்டும்.

தமிழ்நாட்டின் நலன்கள், உரிமைகள் ஆகியவற்றின் மீது படிந்த இருள் விலகி, ஒளி பிறக்க ஆங்கிலப் புத்தாண்டு வகை செய்யப்பட்டும். புத்தாண்டில் தமிழ்நாட்டு மக்களுக்கு அனைத்து நலன்களும், வளங்களும், ஆனந்தம், வளர்ச்சி, அமைதி, நல்லிணக்கம், சகோதரத்துவம் உள்ளிட்ட அனைத்தும் கிடைக்க வேண்டும் என்று கூறி, அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

 

MUST READ