
மகாகவி பாரதியாரின் நினைவுநாளையொட்டி, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “36 ஆண்டுகளுக்கு முன் மய்யம் இதழில் ‘பாரதியின் கவிதைகள் எனக்குத் தாய்’ என்று எழுதியிருக்கிறேன். அப்போது என் வயது 33. அந்த உணர்வும், பாரதி தந்த நெருப்பும் துளியும் குறையவில்லை.
“ரூபாய் 1,000 திட்டத்தில் 1.06 கோடி மகளிர் பயன்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
பாரதி நமக்கு எண்ணற்ற பாதைகளைக் காட்டிச் சென்றிருக்கிறான். அதில் முதன்மையானது ‘கேளடா மானிடவா-எம்மில் கீழோர் மேலோர் இல்லை. மீளா அடிமை யில்லை-எல்லோரும் வேந்தரெனத் திரிவோம்’
சீமான் அக்டோபர் 10- ல் மீண்டும் ஆஜராக உத்தரவு!
மானுட சமத்துவத்தைப் பாடிய ஒப்பற்ற கவிஞனின் நினைவுகளைப் போற்றுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். அத்துடன், மய்யம் இதழில் வெளியான தனது கவிதையையும் பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.