
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வரும் அக்டோபர் 10- ஆம் தேதி மீண்டும் ஆஜராக ஈரோடு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பட்டியலின சமுதாயத்தினர் பற்றி அவதூறாகப் பேசியது தொடர்பாக, ஈரோடு மாவட்டம், கருங்கல்பாளையம் காவல்நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது எஸ்.டி., எஸ்.சி., வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவுச் செய்யப்பட்டது.
இந்த வழக்கு ஈரோடு மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி மாலதி முன்பு இன்று (செப்.11) விசாரணைக்கு வந்தது. அப்போது, சீமான் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார். அப்போது, சீமான் தரப்பு ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
மதுரவாயல் : டெங்கு காய்ச்சலால் 4வயது சிறுவன் உயிரிழப்பு
ஜாமீன் கோரிய மனு மீதான விசாரணையை ஒத்திவைத்து நீதிபதி மாலதி, சீமான் வரும் அக்டோபர் 10- ஆம் தேதி அன்று நேரில் மீண்டும் ஆஜராக உத்தரவிட்டுள்ளார்.