Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழ்நாட்டில் இன்று  5 மாவட்டங்களில் மிக கன மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் இன்று  5 மாவட்டங்களில் மிக கன மழைக்கு வாய்ப்பு

-

- Advertisement -

தமிழ்நாட்டில் இன்று நீலகிரி, கோயம்புத்தூர் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மிக கன மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தெற்கு ஆந்திரா – வடதமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டிய மத்தியமேற்கு – தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் அடுத்த 6 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.

மேலும், இன்று நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு மற்றும் நாமக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கன மழை பெய்யும் என்றும்,
சேலம், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை, கரூர், திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகர், தென்காசி மற்றும் சிவகங்கை ஆகிய 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மக்களே உஷார்...கரையை நெருங்கும் மிக்ஜம் புயல்!

இதேபோல், நாளை நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர் உள்ளிட்ட 15  மாவட்டங்களிலும், நாளை மறுநாள் நீலகிரி உள்ளிட்ட 18 மாவட்டங்களிலும்  கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. இதேபோல், வரும் 9ஆம் தேதி 19 மாவட்டங்களிலும், வரும் 10ம் தேதி 11 மாவட்டங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதேபோல், வரும் 11ம் தேதி  9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான, மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

MUST READ