Homeசெய்திகள்தமிழ்நாடுபத்து மற்றும் பதினோறாம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறது

பத்து மற்றும் பதினோறாம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறது

-

- Advertisement -

பத்து மற்றும் பதினோறாம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறது

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த ஏப்ரல் மாதம் ஆறாந்தேதி முதல் இருபதாந்தேதி வரை நடைபெற்றுள்ளது.

பத்து மற்றும் பதினோறாம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறது
10ம் வகுப்பு தேர்வு முடிவுகள்

பதினோறாம் வகுப்பு  பொதுத்தேர்வு மார்ச் மாதம் பதிமூன்றாந்தேதி முதல் ஏப்ரல் மாதம் ஐந்தாம் தேதி வரை நடைபெற்றுள்ளது. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை 9.40 லட்சம் மாணவ, மாணவிகளும், பதினோறாம் வகுப்பு  பொதுத்தேர்வை 7.70 லட்சம் மாணவ, மாணவிகளும் எழுதினார்கள்.

இதற்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் ஏப்ரல் மாதம் பதினைந்தாம் தேதி தொடங்கி மே மாதம் நான்காம் தேதி வரை நடைபெற்றுள்ளது. இந்நிலையில் பத்தாம் வகுப்பு மற்றும் பதினோறாம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளைய தினமான வெள்ளிக்கிழமை வெளியிடப்படுகிறது.

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் காலை பத்து மணிக்கும், பதினோறாம் வகுப்பு தேர்வு முடிவுகள் மதியம் இரண்டு மணிக்கும் வெளியாகிறது. சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட உள்ளன.

பத்து மற்றும் பதினோறாம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறது
11 ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள்

மாணவ, மாணவிகள் தேர்வு முடிவுகள் மற்றும் மதிப்பெண் விவரங்களை www.tnresults.nic.in, www.dge.in.gov.in ஆகிய இணையதளத்தில் மாணவ-மாணவிகள் பதிவு எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தெரிந்து கொள்ளலாம்.

அதே போல் ஒவ்வொரு மாவட்டத்திலும் கலெக்டர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும், அனைத்து மைய மற்றும் கிளை அலுவலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.

மேலும் மாணவ, மாணவிகள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். மாணவர்கள் பயின்ற பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதி மொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள செல்போன் எண்ணுக்கும், தனித்தேர்வர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது வழங்கிய செல்போன் எண்ணுக்கும் குறுஞ்செய்தி வழியாக தேர்வு முடிவுகள் அனுப்பப்பட உள்ளன என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.

MUST READ