Homeசெய்திகள்தமிழ்நாடுபொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு, வெல்லம் போன்ற இதர பொருட்களை வழங்க சிபிஐ(எம்) கோரிக்கை

பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு, வெல்லம் போன்ற இதர பொருட்களை வழங்க சிபிஐ(எம்) கோரிக்கை

-

வருகின்ற 2023ம் ஆண்டு, பொங்கலுக்கு அரசு சார்பில் வழங்க உள்ள பரிசுத் தொகுப்பில் கரும்பு, வெல்லம் மற்றும் இதர பொருட்களையும் சேர்த்து வழங்கிட தமிழக முதலமைச்சருக்கு – சிபிஐ (எம்) அக்கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார்.

பொங்கலுக்கு அரசு சார்பில் வழங்க உள்ள பரிசுத் தொகுப்பில் கரும்பு, வெல்லம் மற்றும் இதர பொருட்களையும் சேர்த்து வழங்கிட தமிழக முதலமைச்சருக்கு - சிபிஐ (எம்) அக்கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார்.
சிபிஐ (எம்) அக்கட்சி-செயலாளர் பாலகிருஷ்ணன்

            இது குறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில்,  பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்தாண்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக் கடைகள் மூலம்  ரூ. 1,000 ரொக்க பணம், பச்சரிசி, சர்க்கரை அடங்கிய தொகுப்பினை வழங்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) வரவேற்கிறது.

குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக் கடைகள் மூலம்  ரூ. 1,000 ரொக்க பணம், பச்சரிசி, சர்க்கரை அடங்கிய தொகுப்பினை வழங்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) வரவேற்கிறது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)

            கடந்த இரண்டு ஆண்டுகளாக பொங்கல் பரிசு தொகுப்பில் செங்கரும்பும் சேர்த்து வழங்கப்பட்டு வந்தது. இதனால் பொங்கல் பண்டிகைக்காகவே விளைவிக்கப்படும் செங்கரும்புக்கு கட்டுப்படியான விலை கிடைத்து வந்தததால் விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்து வந்தனர். இந்த ஆண்டும் தமிழக அரசு கரும்பை கொள்முதல் செய்யும் என்ற நம்பிக்கையில் மாநிலம் முழுவதும் கரும்பு விவசாயிகள் கூடுதலான பரப்பளவில் கரும்பை விளைவித்துள்ளனர்.

ஆனால் தமிழக அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு இடம் பெறாததால் கரும்பு விவசாயிகள் பெருத்த ஏமாற்றமடைந்துள்ளதுடன், விளைவித்த கரும்பின் விலை வீழ்ச்சியடைந்து மிகப் பெரிய இழப்பு ஏற்படும் என ஆழ்ந்த கவலையில் மூழ்கியுள்ளனர். அதுபோல், பொங்கல் பரிசு தொகுப்பில் வெல்லம் இடம்பெறும் என்ற நம்பிக்கையிலிருந்த வெல்லம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களும்,  உற்பத்தியாளர்களும் ஏமாற்றம் அடைந்துள்ளனர். அதுபோல், கடந்த ஆண்டுகளில் தமிழக அரசின் பொங்கல் தொகுப்பில் வழங்கப்பட்டு வந்துள்ள ஏலக்காய், முந்திரி, நெய், வெல்லம், கரும்பு போன்றவைகளும் வழங்கப்பட வேண்டுமென பொதுமக்கள் மத்தியிலும் எதிர்பார்ப்பும் உள்ளது.

 தமிழக அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு இடம் பெறாததால் கரும்பு விவசாயிகள் பெருத்த ஏமாற்றமடைந்துள்ளதுடன், விளைவித்த கரும்பின் விலை வீழ்ச்சியடைந்து மிகப் பெரிய இழப்பு ஏற்படும் என ஆழ்ந்த கவலையில் மூழ்கியுள்ளனர்.
கரும்பு விவசாயிகள்

            எனவே, தமிழக அரசு அறிவித்துள்ள பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு, வெல்லம் மற்றும் கடந்த ஆண்டுகளில் வழங்கப்பட்ட முந்திரி, ஏலக்காய், நெய் போன்ற பொருட்களையும் சேர்த்து தரமான முறையில் வழங்கிடவும்,  கரும்பை விவசாயிகளிடமும், வெல்லத்தை உற்பத்தியாளர்களிடமும் நேரிடையாக கொள்முதல் செய்திடவும் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் உரிய நடவடிக்கைகள் எடுக்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இதன் மூலம் கரும்பு விவசாயிகளும், வெல்லம் உற்பத்தியாளர்களும் பெரிதும் மகிழ்ச்சியடைவதுடன் பொதுமக்களும் பயனடைவார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அந்த கடிதத்தில் மார்க்சிஸ்ட் கட்சின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

MUST READ