- Advertisement -
சட்டப்பேரவையில் விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம் குறித்து காரசாரமான விவாதம் நடைபெற்றது. பயிர்க்கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) சார்பில் வலியுறுத்தப்பட்டது.

பேரவையில் இதுகுறித்து பேசிய சட்டமன்ற உறுப்பினர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், “முழு பயிர்க்கடன் தள்ளுபடி குறித்த தேர்தல் வாக்குறுதி என்னவானது?” என்று கேள்வியெழுப்பினார். மேலும், விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு மொத்தம் ₹21,000 கோடி அளவிலான பயிர்க்கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
இதற்குப் பதிலளித்துப் பேசிய அமைச்சர் காந்திராஜ், புதிய அரசு பொறுப்பேற்று ஆட்சிக்கு வந்த முதல் 3 மாதங்களிலேயே சுமார் ₹6,000 கோடி மதிப்பிலான பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். அரசின் இந்த நடவடிக்கையின் மூலம் மாநிலம் முழுவதும் சுமார் 14.43 லட்சம் விவசாயிகள் நேரடியாகப் பயனடைந்துள்ளனர் என்றும் அவர் சட்டப்பேரவையில் விளக்கமளித்தார்.
