Homeசெய்திகள்தமிழ்நாடுதவறி விழுந்த வைகோ - நலமுடன் இருப்பதாக துரை வைகோ தகவல்!

தவறி விழுந்த வைகோ – நலமுடன் இருப்பதாக துரை வைகோ தகவல்!

-

வைகோ இரங்கல்

நேற்றிரவு வீட்டில் தவறி விழுந்த மதிமுகப் பொதுச்செயலாளர் வைகோ அவர் நலமுடன் இருப்பதாக துரை வைகோ தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக துரை வைகோ வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், “இயக்கத் தந்தை தலைவர் வைகோ அவர்கள் நலம் பெறுவார்; மதிமுக கன்னியாகுமரி மாவட்டச் செயலாளர் சகோதரர் வெற்றிவேல் அவர்களின் மகள் மணவிழாவில் பங்கேற்பதற்காக இயக்கத்தந்தை தலைவர் வைகோ அவர்கள் நேற்று திருநெல்வேலி வருகை தந்தார்கள். எதிர்பாரா விதமாக நேற்று இரவு வீட்டில் கால் தடுமாறி விழுந்ததில், அவரது வலது தோளில் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறது.

"தேர்தலில் மதவாத சக்திகளுக்கு முற்றுப்புள்ளி"- துரை வைகோ பேட்டி!

மருத்துவர்கள் அறிவுறுத்தலின்படி உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்பதால் தூத்துக்குடி விமான நிலையத்திலிருந்து இன்று காலை சென்னை அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறார். சிறிய அறுவை சிகிச்சைக்கு பிறகு இயக்கத் தந்தை தலைவர் வைகோ அவர்கள் உடல் நலம் பெறுவார்கள்; வேறு அச்சம் கொள்கிற வகையில் எதுவும் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

MUST READ