spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஅதிமுகவில் இருந்து நீக்கியது தொடர்பாக வழக்கு தொடர்வேன் - செங்கோட்டையன்..

அதிமுகவில் இருந்து நீக்கியது தொடர்பாக வழக்கு தொடர்வேன் – செங்கோட்டையன்..

-

- Advertisement -

அதிமுகவில் இருந்து நீக்கியது தொடர்பாக வழக்கு தொடர்வேன் - செங்கோட்டையன்..அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டது தொடர்பாக வழக்கு தொடர்வேன் என அக்கட்சியின் மூத்த தலைவர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

அதிமுகவில் அக்கட்சியின் மூத்த தலைவர் செங்கோட்டையனுக்கும், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு இடையே அண்மைக்காலமாக பனிப்போர் நிலவி வருகிறது. அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் கட்சியில் இணைத்து கட்சியை பலப்படுத்தும் பணிகளை எடப்பாடி பழனிசாமி மேற்கொள்ள வேண்டும் என செங்கோட்டையன் கெடு விதித்திருந்தார். இதனையடுத்து அவரை கட்சியில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி அதிரடி நடவடிக்கை எடுத்தார். இதற்கிடையே ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், செங்கோட்டையன் ஆகியோர் ஒன்றாக சேர்ந்து, தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். அத்துடன் சசிகலாவையும் சந்தித்து பேசினர். இந்த அடுத்தடுத்த நிகழ்வுகள் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

we-r-hiring

இந்நிலையில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டது குறித்து செங்கோட்டையன் இன்று செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார். அப்போது பேசிய அவர், “1975ம் ஆண்டில் கோவையில் நடந்த முதல் பொதுக்குழுவை சிறப்பாக நடத்தி எம்.ஜி.ஆரின் பாரட்டை பெற்றவன். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா கலத்தில் கட்சி வலிமையோடு இருக்க அயராது பணியாற்றினேன். ஜெயலலிதா வழியில் கட்சியில் என்னை அர்பணித்துக் கொண்டு பயணித்தவன். அதிமுகவுக்கு என்னை அர்ப்பணித்து கொண்டேன். கட்சி உடைந்துவிடக்கூடாது என்பதில் நான் உறுதியாக இருந்தேன். அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதே என்னுடைய நோக்கமாக இருந்தது.

ஜெயலலிதா மறைந்த பிறகு கட்சியை வழிநடத்த சசிகலா என்னிடம் பேசினார். ஜெயலலிதா மறைந்த பிறகு 2 முறை வாய்ப்பு கிடைத்தும் கட்சி உடைந்துவிடக் கூடாது என்பதற்காக விட்டுக் கொடுத்தேன். எடப்பாடி பழனிசாமியை பரிந்துரைத்தேன். பழனிசாமி பொறுப்பேற்ற பின்னர் 2019, 2021 சட்டமன்ற தேர்தல் , 2024 உள்ளாட்சி தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்தது. பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற பின்னர் ஒரு முறை கூட வெற்றி பெறாதவர்” என்றார்.

கட்சியை ஒன்றிணைக்க கெடு விதித்தது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “ நாம் விதித்து கெடு அல்ல. பேசி முடிவெடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் கூறினேன். கட்சி ஒன்றிணைய தொடர்ந்து வலியுறுத்தினோம். 10 நாட்களில் பேச்சு தொடங்கி, யாரை சேர்க்க வேண்டுமென பொதுச்செயலாளர் முடிவெடுக்கலாம் என்றேன். கட்சி வலிமையாகவும், ஒற்றுமையாகவும் இருக்க வேண்டும். அதுவே எனது நோக்கம். எம்.ஜி.ஆர் தோல்வி காணாதவர். ஜெயலலிதா ஒரு முறை தோற்றால், மறுமுறை வெற்றி காணும் சாதனையாளர். கட்சியை வலிமைபடுத்த ஒத்துழைப்பு தர வேண்டுமென்று நீக்கப்பட்டவர்களோடு பேசினேன்.

கருத்து கூறியதும் பொறுப்பில் இருந்து நீக்கம் செய்யப்பட்டேன். என்னை பி டீம் என்கிறார்கள். யார் பி டீம் என நாடறியும். நான் பி டீமில் இல்லை. ஏ1ல் பழனிசாமி இருக்கிறார். ஏ1 ஆகவே பழனிசாமி செயல்பட்டு கொண்டிருக்கிறார்.

கட்சியில் இருந்து நிக்கியது வேதனையாக உள்ளது மனவேதனையில் இருக்கிறேன். இரவு முழுவதும் தூங்கவில்லை. 53 ஆண்ட்கள் கட்சியில் இருந்து சீனியர் என்கிற வகையில் நோட்டீஸ் அனுப்பியிருக்க வேண்டும். ஒரு மூத்த தலைவரான எனக்கு நோட்டீஸ் கூட அனுப்பவில்லை.

2026ல் வெற்றி வாய்ப்பை இழந்தால், ஏன் முன்பே கூறவில்லை எனக் கேட்டுவிடக் கூடாது என்பதற்காகவே கூறினேன். யார் துரோகம் செய்தது? எங்களிடம் எல்லாவற்ரும் வீடியோ, ஆடியோ ஆதாரம் உள்ளது. என் மீது களங்கம் சுமத்தப்பட்டு இருப்பது வேதனை ஏற்படுத்துகிறது.
பாஜகவோடு கூட்டணி இல்லை என்று கூறினார். ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்றை பேசி வருகிறார். துரோகம் செய்வதில் பழனிசாமிக்கு நோபல் பரிசு தரலாம். என்னை குற்றம் சாட்டும் முன்பு, குற்றம் செய்தவர்கள் யார் என்று தெரிந்து செய்திருக்க வேண்டும். கொடநாடு கொலைக்கு வழக்குக்கு ஏன் குரல் கொடுக்கவில்லை என பேட்டியில் கூறியுள்ளார்.

அதிமுகவின் தற்காலிக பொதுச்செயலாளராகவே பழனிசாமி இருக்கிறார். அதிமுகவில் இருந்து என்னை நீக்கியது தொடர்பாக சட்டவல்லுநர்களுடன் ஆலோசித்து முடிவு செய்வோம். உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கினாலும் விதியின்படின் நீக்கவில்லை. இதனால் அடுத்தக்கட்ட நடவடிக்கை பற்றி ஆலோசனை மேற்கொள்வோம். அவர், சர்வாதிகார போக்கில் செயல்பட்டு இருக்கிறார். அதிமுகவில் இருந்து நீக்கியது தொடர்பாக வழக்கு தொடர்வேன்” என்று செங்கோட்டையன் தெரிவித்தார்.

MUST READ