
பெட்ரோல் குண்டு வீச்சு குறித்த ராஜ்பவன் அளித்த புகாரை காவல்துறை பதிவுச் செய்யவில்லை என்று ஆளுநர் மாளிகை குற்றம் சாட்டியுள்ளது.
அரசு ஒப்பந்ததாரர் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!
இது தொடர்பாக, தமிழக ஆளுநர் மாளிகை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “ராஜ்பவனின் தாக்குதல் குறித்த புகாரை காவல்துறை பதிவு செய்யவில்லை. தன்னிலையாகப் பதிவு செய்யப்பட்ட புகார், தாக்குதலை சாதாரண நாசகார செயலாக நீர்த்துப்போகச் செய்து விட்டது.
சாலையில் சென்ற பள்ளி வேன் தீப்பிடித்து எரிந்தது!
அவசரகதியில் கைது மேற்கொள்ளப்பட்டு மாஜிஸ்திரேட்டை நள்ளிரவில் எழுப்பி குற்றம்சாட்டப்பட்டவர் சிறையில் அடைக்கப்பட்டு விட்டதால் பின்னணியில் உள்ளவர்களை அம்பலப்படுத்தக்கூடிய விரிவான விசாரணை தவிர்க்கப்பட்டுள்ளது. நியாயமான விசாரணை தொடங்கும் முன்பே கொல்லப்படுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.