spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுகன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடும் பொன்.ராதாகிருஷ்ணன் வேட்புமனு தாக்கல்

கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடும் பொன்.ராதாகிருஷ்ணன் வேட்புமனு தாக்கல்

-

- Advertisement -

கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

we-r-hiring

மக்களவை தேர்தல் அறிவிப்புகளை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் கடந்த 16 ஆம் தேதி வெளியிட்டார். அதன்படி மொத்தம் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. மக்களவை தேர்தலில் 97 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 1,82 கோடி முதல்முறை வாக்காளர்கள் இந்த தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். ஆண் வாக்காளர்கள் 49.7 பேரும், பெண் வாக்காளர்கள் 47.01 கோடி பேரும் உள்ளனர். 88.4 லட்சம் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் உள்ளனர். மூன்றாம் பாலினத்தவர்கள் 48,044 பேர் உள்ளனர். தமிழகத்தை பொறுத்தவரையில், திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி என நான்கு முனை போட்டி நிலவுகிறது.

இந்த நிலையில், கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். கடந்த 2014ம் ஆண்டு முதல் பொன்.ராதாகிருஷ்ணன் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்டு வருகிறார். 2014ம் ஆண்டு அவர் வெற்றி பெற்றதை அடுத்து அவருக்கு மத்திய இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இதேபோல் கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் அவர் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிட்ட நிலையில், அதில் அவரை எதிர்த்து போட்டியிட்ட விஜய் வசந்த் வெற்றி பெற்றார். இந்த நிலையில், மீண்டும் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடுவதற்காக இன்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

MUST READ