Homeசெய்திகள்தமிழ்நாடு"தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெப்ப அலை வீசக்கூடும்"- வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

“தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெப்ப அலை வீசக்கூடும்”- வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

-

நாடு முழுவதும் வெயிலின் தாக்கம் வழக்கத்தை விட அதிகரிக்கும்!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெப்ப அலை வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

புதிய உச்சத்தில் ஜி.எஸ்.டி. வரி வசூல்!

இது குறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “வரும் மே 03- ஆம் தேதி வரை வட தமிழக உள் மாவட்டங்களில் வெப்ப அலை வீசக்கூடும்; உள் மாவட்டங்களில் மே 05- ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 4 டிகிரி செல்ஸியஸ் வரை அதிகரிக்கலாம்.

அமித்ஷா வீடியோ- முதலமைச்சர் ரேவந்த் ரெட்டிக்கு சம்மன்!

சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் ஓரிரு இடங்களில் மழை பெய்யும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ