பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில், ஓட்டுநர் இன்றி ரிமோட் கண்ட்ரோல் (Remote Control) மூலம் இயக்கப்பட்டு வந்த நவீன கார் ஒன்று, எதிர்பாராதவிதமாக ஓடும் போலீஸ் வேன் மீது மோதி விபத்துக்குள்ளான சம்பவம் சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
யூடியூப் வீடியோ படப்பிடிப்பில் நேர்ந்த விபத்து
பாகிஸ்தான் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அதிமுக்கிய பாதுகாப்பு மண்டலத்தில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. ஆட்டோமொபைல் துறையைச் சேர்ந்த பிரபல பத்திரிகையாளர் (Automobile Reviewer) ஒருவர், தனது இணையதளக் காணொளிக்காக (Video Review) காரில் ஓட்டுநர் இல்லாமல், அதை ரிமோட் தொழில்நுட்பம் மூலம் இயக்கிப் படப்பிடிப்பு நடத்தி வந்துள்ளார். அப்போது, காரை ரிமோட் மூலம் கட்டுப்படுத்தப் பயன்படுத்தப்பட்ட இணையதள இணைப்பு (Internet Connection) திடீரெனத் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த அந்த சொகுசு கார், தறிகெட்டு ஓடி அப்பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களின் ரோந்து வேன் மீது பலமாக மோதியது.

இன்டர்நெட் தடையால் ஏற்பட்ட தொழில் நுட்பக் கோளாறு
இணைய இணைப்பு கட் ஆனதே இந்த விபத்துக்கு முதன்மை காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிமோட் சிக்னல் துண்டிக்கப்பட்டதும், காரில் பொருத்தப்பட்டிருந்த தானியங்கி பிரேக்கிங் சிஸ்டம் செயல்படாமல் போனதால் இந்த அசம்பாவிதம் நேர்ந்துள்ளது. ராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியில் நடந்த இந்த விபத்து குறித்து பாகிஸ்தான் காவல்துறை மற்றும் ராணுவப் பாதுகாப்பு அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஓட்டுநர் இல்லாத நவீன தொழில் நுட்ப வாகனங்களை பொதுவெளியிலும், பாதுகாப்பு மண்டலங்களிலும் சோதிப்பது குறித்த பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து மீண்டும் கேள்விகள் எழுந்துள்ளன.
அமெரிக்காவின் வான் பாதுகாப்பு கவசங்களை ஏமாற்றி தாக்கியது ஈரானின் ‘கைபர் ஷெகன்’ ஏவுகணை!
