spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்உலகம்நைஜரில் பயங்கரவாத தாக்குதல்- 29 ராணுவ வீரர்கள் படுகொலை

நைஜரில் பயங்கரவாத தாக்குதல்- 29 ராணுவ வீரர்கள் படுகொலை

-

- Advertisement -

நைஜரில் பயங்கரவாத தாக்குதல்- 29 ராணுவ வீரர்கள் படுகொலை

ஆப்பிரிக்க நாடான நைஜரில் நேற்று இரவு நடந்த பயங்கரவாத தாக்குதலில் 29 ராணுவ வீரர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிர்ச்சி... திடீரென நடந்த பயங்கரவாத தாக்குதல்; 29 ராணுவ வீரர்கள் உயிரிழந்த பரிதாபம்

ஆப்பிரிக்க நாடான நைஜரில் உள்நாட்டு கிளர்ச்சி நடந்துவரும் நிலையில், கடந்த ஜூலை மாதம் அங்குள்ள அதிபர் முகமது பாசும் ராணுவத்தினரால் சிறைபிடிக்கப்பட்டார். இதையடுத்து அங்கு ராணுவ ஆட்சி நடைபெற்றுவரும் நிலையில், மாலி எல்லை அருகே பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது.

we-r-hiring

இதையடுத்து தபடோல் பகுதியில் ராணுவத்தினர் நேற்று இரவு தீவிர ரோந்துப் பணியை மேற்கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் மீது வெடிகுண்டுகளை வீசி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் வெடித்துச் சிதறி, அதில் பயணித்த 29 ராணுவ வீரர்கள் உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும் இருவர் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதல் சம்பவத்தை நைஜர் பாதுகாப்பு அமைச்சகம் உறுதி செய்ததை அடுத்து, இச்சம்பவம் ஆப்பிரிக்க நாடுகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

MUST READ