spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்விளையாட்டுமகளிர் ஆசியக் கோப்பை கிரிக்கெட் - பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இலங்கை அணி

மகளிர் ஆசியக் கோப்பை கிரிக்கெட் – பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இலங்கை அணி

-

- Advertisement -

ஆசியக் கோப்பை மகளிர் டி20 தொடரின் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியை போராடி வீழ்த்தி இலங்கை அணி இறுதிப்போட்டிக்கு முன்னெறி அசத்தியுள்ளது.

we-r-hiring

ஆசியக்கோப்பை மகளிட் டி20 தொடரானது இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நான்கு அணிகள் அரையிறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன. இதில் இந்தியா, வங்கதேசம், பாகிஸ்தான், இலங்கை ஆகிய அணிகள் இடம் பெற்றன. இதில் முதலாவது அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் மோதின. இப்போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இதனைத்தொடர்ந்து 2வது அரையிறுதி ஆட்டமும் நேற்று நடைபெற்றது. இதில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலாவது பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதனையடுத்து பாகிஸ்தான் அணி முதலாவது பேட்டிங் விளையாடியது. முதலாவது பேட்டிங்கில் பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழந்து 140 ரன்கள் எடுத்தது. அணியின் அதிகபட்சமாக முனிபா அலி 37 ரன்கள் எடுத்தார். பின்னர் 141 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி இரண்டாவது பேட்டிங் விளையாடியது. அணியானாது 19.5 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழந்து 141 ரன்கள் எடுத்து போராடி வெற்றி பெற்றது. இலங்கை அணியின் அதிகபட்சமாக சமாரி அதபத்து 63 எடுத்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார். இந்த வெற்றியின் ,மூலம் இலங்கை அணி நாளை நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்திய அணியுடன் மோதவுள்ளது.

MUST READ