spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாமகாராஜா பட இயக்குனரிடம் கதை கேட்ட நடிகர் தனுஷ்.... விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

மகாராஜா பட இயக்குனரிடம் கதை கேட்ட நடிகர் தனுஷ்…. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

-

- Advertisement -

கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி விஜய் சேதுபதி நடிப்பில் மகாராஜா எனும் திரைப்படம் வெளியானது. இந்த படத்தை நித்திலன் சாமிநாதன் இயக்கியிருந்தார்.மகாராஜா பட இயக்குனரிடம் கதை கேட்ட நடிகர் தனுஷ்.... விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு! வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியிருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றதோடு மட்டுமல்லாமல் பல்வேறு தரப்பினர் இடையே பாராட்டுகளையும் பெற்று வருகிறது. மகாராஜா படத்திற்கு முன்பாக இயக்குனர் நித்திலன் சாமிநாதன் குரங்கு பொம்மை எனும் திரைப்படத்தையும் இயக்கி பலரின் பாராட்டுகளை பெற்றார். இரண்டு படங்களுக்கும் இடையில் 6 வருடங்கள் இடைவெளி இருந்தாலும் தரமான திரை கதையை தயார் செய்து ரசிகர்கள் மனதை வென்றுள்ளார் நித்திலன். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக நித்திலன் சாமிநாதன் நயன்தாரா நடிக்கும் புதிய படம் ஒன்றை இயக்கப் போவதாகவும் அந்த படத்திற்கு மகாராணி என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியானது. மகாராஜா பட இயக்குனரிடம் கதை கேட்ட நடிகர் தனுஷ்.... விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!ஆனால் இதுவரை இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. அதேசமயம் நடிகர் தனுஷ், நித்திலன் சாமிநாதனிடம் கதை ஒன்றை கேட்டிருப்பதாகவும் அந்த கதை தனுஷுக்கு மிகவும் பிடித்துப் போனதாகவும் சொல்லப்படுகிறது. எனவே நயன்தாராவை இயக்குவதற்கு முன்பாக நடிகர் தனுஷை இயக்கும் திட்டத்தில் இருக்கிறாராம் நித்திலன் சாமிநாதன். எனவே விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ