நடிகை பிரியங்கா அருள் மோகன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர். இவர் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் என்ற திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் கதாநாயகியாக அறிமுகமானார். அதைத் தொடர்ந்து டான், எதற்கும் துணிந்தவன், கேப்டன் மில்லர் என பல படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பெயர் பெற்றுள்ளார். கடைசியாக இவர் நானி நடிப்பில் வெளியான சூர்யாவின் சனிக்கிழமை திரைப்படத்தில் நானிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
அடுத்தது ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் பிரதர் திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்துள்ளார் பிரியங்கா மோகன். இவ்வாறு பிஸியான நடிகையாக வலம் வரும் இவர் பிரதர் திரைப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியை தொடர்ந்து தன்னுடைய காரில் செல்ல முற்படும்போது ரசிகர்கள் பலரும் பிரியங்கா அருள் மோகனை சூழ்ந்து தங்களின் அன்பை வெளிப்படுத்தும் வகையில் செல்ஃபி கேட்டனர்.
அப்போது பிரியங்கா மோகன், “என் காருக்குள் வரீங்களா” என்று கோபமாக பேசினார். அதன் பின்னர் சில ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டார். இருப்பினும் அவர் கோபமாக பேசிய வீடியோவை ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்து வரும் நிலையில் செல்ஃபி கேட்டதற்கு ஓவராக சீன் போடுறாங்க என்று பலரும் அவரை விமர்சித்து வருகின்றனர்.
- Advertisement -