spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைசக மனுஷியாக கூட பார்க்க மாட்டாங்க! ஆவடியில் தூய்மை பெண்கள் கண்ணீர்!

சக மனுஷியாக கூட பார்க்க மாட்டாங்க! ஆவடியில் தூய்மை பெண்கள் கண்ணீர்!

-

- Advertisement -

சக மனுஷியாக கூட பார்க்க மாட்டாங்க!
ஆவடியில் தூய்மை பெண்கள் கண்ணீர்!

சமுதாயத்தில் பெரும் பான்மையோர் செய்வதற்கு முன் வராத பணியை ஒரு குறிப்பிட்ட மக்கள் மட்டும் செய்து வருகிறார்கள்.

இரவு பகல் என்றும் பாராமல் அர்ப்பணிப்போடு  களப்பணி செய்து வருகின்றனர் அவர்களின் வாழ்வும் அர்பணிப்பும், அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் என்னவென்று அலசி ஆராய “தூய்மைப்பணியாளர்

மேகலா அவர்களை சந்தித்தோம்.

we-r-hiring

என் பெயர் மேகலா நான் இந்த பணியை பத்து ஆண்டுகளுக்கு மேலாக செய்துக்கொண்டு வருகிறேன். இந்த பணியை நான் முதலில்  செய்ய தொடங்கியதன் நோக்கம் வீட்டு வறுமை, குழந்தைகள் படிப்பு, கடன், என பல விதமான இக்கட்டான சூழ்நிலை, ஆரம்பத்தில் இந்த தொழிலை செய்யும் பொழுது குடும்ப சூழ்நிலைக்காக ஏற்றுக்கொண்டேன்.

இந்த பணியில் நீங்கள் சந்திக்கும் பிரச்சனைகள் என்ன?

காலையில் பணி தொடங்கியதில் இருந்து மதியம் உணவு அருந்தும் நேரம் வரை நின்றுக்கொண்டே இருக்க வேண்டியிருக்கும். மதிய உணவு இடைவேளையில் மட்டும் தான் நாங்கள் ஓய்வு எடுத்துக்கொள்ள முடியும்.அதுவும் பத்து நிமிடம் மட்டுமே இளைபார முடியும்.

இவ்வாறு நின்றுகொண்டே பணிபுரிவதால் கை கால் வலி, இடுப்பு வலி, தலைவலி  என தினமும் ஏதோ ஒரு வலியுடன் தான் வேலை செய்கிறோம். எப்பொழுது பணி முடியும் வீட்டிற்க்கு சென்று உறங்கலாம் என்று நினைப்போம்.

வீட்டிற்கு சென்றால் அங்கு வீட்டு வேலைகள் மலை போல் குவிந்திருக்கும். என் கணவரோ பிள்ளையோ இவர்கள் யாரும்  எந்த ஒரு உதவியும் செய்ய மாட்டார்கள். அப்படி வீட்டு வேலை செய்ய உதவி கேட்டால் போ அம்மா நீயே செய், வேலைக்கு போற மற்ற அம்மா எல்லாம் இல்லையா என்று என்னிடம் முகம் சுளிப்பார்கள்.

இப்படி வீட்டில் உள்ளவர்கள் இருக்கிறாரகள். அதே, வேலை செய்யும் இடத்தில்  சிறிது நேரம் உட்கர்ந்தால் கூட மேல் அதிகாரிகள் வந்து என்னம்மா எப்பப்பாரு வேலை செய்யற நேரத்துல வேலை செய்யாம உட்கர்ந்து கொண்டே இருக்க என்று கோபித்துகொள்வார்கள்.

நானோ இரயில்வே துப்புரவு பணியாளர் இரயில் தண்ட வாளங்களில் உள்ள குப்பைகளை அகற்றும் வேலை பார்க்கும் பொழுது இரயில் வருவதை கூட சில சமயம் கவனிக்க முடியாது.

குப்பைகள் அகற்றுவது தான் கொடுமை, குப்பை தொட்டிகள் இல்லாத இடங்களே இல்லை குப்பைகளை கண்ட இடமெல்லாம் போட்டுவிட்டு தான் செல்கிறார்கள். அதை அகற்றுவது தான் எங்கள் வேலை அதை நான் மறுக்கவில்லை.

சிலர் தண்டவாளங்களில் மலம் கழித்து விட்டு செல்வார்கள், ஒரு நாள் என்றால் பரவாயில்லை தினம் தினம் அருவெறுப்பான இந்த வேலையை செய்யும் பொழுது எப்படி சாப்பிட தோன்றும் இப்படி பல நாட்கள் உணவு அருந்த பிடிக்காமல் இந்த பணியை செய்து வருகிறோம்.

அதிலும் சிலர் நாங்கள் பெருக்கி கொண்டு இருக்கும் பொழுது குப்பைகளை போடுவார்கள் அப்பொழுது  நாங்கள் அவர்கள் முகத்தை பார்த்தால் என்னமா பாக்குற பெருக்கு, அதானே உன் வேலை அதுக்கு தானே  நீங்க சம்பளம் வாங்குறிங்க, முகத்தில் அடித்தவாரு பேசுவார்கள்.

இரயிலில் பயணம் செய்யும் பொழுது நீங்கள் யாராவது கவனித்தீர்களா. துப்புரவு பணியாளர்கள் நாங்கள் யாரும் இருக்கையல் அமர்ந்தபடி பயணம் செய்து இருக்க மாட்டோம்.

காரணம் எங்கள் மேல் வரும் குப்பை நாற்றம், மற்றும் எங்கள் உடை தான், இதனால்  எங்கள் அருகில் கூட நிற்கமாட்டார்கள், சற்று விலகியே நிற்ப்பார்கள்.

ஏன்? சுப தினத்தில் கூட எங்களுக்கு யாரும் ஒரு வாழ்த்து கூட சொல்லுவது கிடையாது அப்படி ஒரு வேலை நாங்கள் கை கொடுத்தால் கூட அதை யாரும் ஏற்கமாட்டார்கள். இது தான் எங்கள் வாழ்க்கை. என்று மனம் உருகி பேசினார்கள்.

 

MUST READ