ஹோலி கொண்டாட்டத்தின் போது நடந்த இரண்டு துயர சம்பவங்கள்!
காஜியாபாத்தில் உள்ள முராத்நகர் நகரின் அக்ரசென் மார்க்கெட் பகுதியில் ஹோலி விளையாடிய பின்னர், தீப்கா கோயல் (40) மற்றும் அவரது மனைவி ஷில்பி (36) தம்பதியினர் தங்கள் வீட்டின் குளியலறையில் ஒன்றாகக் ஹோலி கலர்களை கலைக்க சென்றனர்.

தம்பதியினர் ஹோலி வண்ணங்களைக் கழுவச் சென்ற போது நீண்ட நேரமாகியும் வெளியே வராததால், அவர்களது குழந்தைகள் மற்ற குடும்பத்தினர் மற்றும் அக்கம்பக்கத்தினரை, கதவு உடைத்தபோது அவர்கள் இருவரும் கீழே விழுந்துகிடந்தது தெரியவந்தது.
அவர்கள் இருவரும் மயக்கமடைந்து கிடப்பதைக் கண்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர், அங்கு தம்பதியினரை மருத்துவர்கள் சோதனை செய்தலில் ஏற்கனவே இறந்து தெரியவந்தது.
மேலும், இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களின் உடலை பிரேத பரிசோதனைகாக அனுப்பி வைத்தனர்.
ஹோலி தினத்தன்று நடந்த மற்றொரு சம்பவத்தில், மோடி நகரில் மதியம் நடந்த கொண்டாட்டத்தின் போது லட்சுமி நகரை சேர்ந்த வினித் குமார் என்பவர் அதிகம் சரிந்தால் 30 வயதுடைய நபர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
மேலும் அவரது குடும்பத்தினர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர் இறந்துவிட்டதாக தெரியவந்தது. மேலும் அவரின் உடலை பிரேத பரிசோதனைகாக அனுப்பி வைத்தனர்