spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சை கருத்து... நடிகை கஸ்தூரி மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சை கருத்து… நடிகை கஸ்தூரி மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

-

- Advertisement -

தெலுங்கு சமூக பெண்கள் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த விவகாரத்தில் நடிகை கஸ்தூரி மீது 4 பிரிவுகளின் கீழ் எழும்பூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டம் ஒன்றில் பங்கேற்று பேசிய நடிகை கஸ்தூரி, தெலுங்கு சமூக பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய விதமாக கருத்து தெரிவித்திருந்தார். அவரது கருத்து பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவருக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். எதிர்ப்பு வலுத்ததால் தெலுங்கு மக்கள் குறித்த சர்ச்சை பேச்சுக்கு வருத்தம் தெரிவித்து நடிகை கஸ்தூரி அறிக்கை வெளியிட்டார்.

we-r-hiring

அதில் தெலுங்கு மக்களை புண்படுத்துவது தமது நோக்கம் இல்லை என்றும், கவனக்குறைவாக வந்த வார்த்தைகள் யாரையும் காயப்படுத்தியிருந்தால் வருந்துவதாகவும் தெரிவித்திருந்தார். மேலும், தெலுங்கு மக்கள் குறித்து தான் பேசிய வார்த்தைகள் அனைத்தையும் திரும்பப் பெறுவதாகவும் கூறியிருந்தார்.

இந்த நிலையில், தெலுங்கு மக்கள் குறித்த சர்ச்சை கருத்து தொடர்பாக நடிகை கஸ்தூரி மீது 4 பிரிவுகளின் கீழ் எழும்பூர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கஸ்தூரி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அகில இந்திய தெலுங்கு சம்மேளனம் தரப்பில் இருந்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

kasturi
kasturi

அதன்படி, கலவரத்தை தூண்டுதல், மதம், இனம், பிறந்த இடம், வசிப்பிடம், மொழி போன்றவற்றின் அடிப்படையில் பல்வேறு குழுக்களிடையே பகைமையை உருவாக்குதல், பொது அமைதியை கெடுக்கும் தவறான தகவல்களை பரப்புதல் மற்றும் பகைமை உண்டாக்கும் பேச்சு ஆகிய 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

MUST READ