spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்உலகம்பாகிஸ்தான் ரயில் நிலையத்தில் தற்கொலைப்படைத் தாக்குதல்... 24 பேர் பலி, 47 பேர் படுகாயம்

பாகிஸ்தான் ரயில் நிலையத்தில் தற்கொலைப்படைத் தாக்குதல்… 24 பேர் பலி, 47 பேர் படுகாயம்

-

- Advertisement -

பாகிஸ்தான் நாட்டின் குவெட்டா நகரில் ரயில் நிலையத்தில் நடந்த தற்கொலைப்  படை தாக்குதலில் 24 பேர் கொல்லப்பட்டனர். 40-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

பாகிஸ்தான் பலூசிஸ்தான் மாகாணத்தின் தலைநகரான குவெட்டா நகர ரயில் நிலையத்தில் இன்று பெஷாவர் செல்லும் ஜாபர் விரைவு ரயிலுக்காக ஏராளமான பயணிகள் காத்திருந்தனர். அப்போது, ரயில் நிலையத்தில் திடீரென பயங்கர சத்தத்துடன் குண்டுகள் வெடித்து சிதறியது. இந்த குண்டு வெடிப்பில் 24 பேர் உயிரிழந்தனர். 47 பேர் படுகாயம் அடைந்தனர்.

we-r-hiring

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலிசார் மற்றும் மீட்பு படையினர், குண்டுவெடிப்பில் காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக குவெட்டா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே, போலிசாரின் விசாரணையில் ரயில்நிலைய டிக்கெட் புக்கிங் கவுன்டர் அருகே குண்டு வெடித்து சிதறியது தெரியவந்துள்ளது. மேலும், இந்த சம்பவத்தில் ரயில்நிலைய மேற்கூறை முற்றிலும் சேதம் அடைந்தது.

ரயில் நிலைய தாக்குதல் காரணமாக குவெட்டா நகரில் ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த குண்டுவெப்பு சம்பவத்திற்கு பலூசிஸ்தான் விடுதலைப்படை அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது

MUST READ