spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைதவெகவுக்கு டெபாசிட் கிடைக்காது... சர்வே முடிவால் அதிர்ச்சியில் விஜய்!

தவெகவுக்கு டெபாசிட் கிடைக்காது… சர்வே முடிவால் அதிர்ச்சியில் விஜய்!

-

- Advertisement -

விஜய் தனது கட்சியை வளர்ப்பதற்கான எந்த வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்றும், தனக்குள்ள வாக்கு சதவீதத்தை வைத்து அரசியல் கட்சிகளிடம் பேரம் பேசவே முயற்சிப்பார் என்றும் பத்திரிகையாளர் மில்டன் குற்றம்சாட்டியுள்ளார்.

we-r-hiring

தமிழக வெற்றிக்கழகம் நடத்திய சர்வே தொடர்பாகவும், அக்கட்சியில் நிலவும் உட்கட்சி பிரச்சினைகள் குறித்தும் பத்திரிகையாளர் மில்டன் பிரபல யூடியூப் சேனல் ஒன்றுக்கு சிறப்பு நேர்காணல் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: த.வெ.க. மாநில மாநாட்டிற்கு பின்னர் நவம்பர் மாத இறுதியில் ஒரு வார கால அவகாசத்தில் கட்சிக்குள் சர்வே எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பெரிய அளவில் இல்லாமல் ஒரு குறிப்பிட்ட டீமிடம் பேசி மண்டல அளவில் பிரித்து, மண்டலத்திற்கு ஒரு பொறுப்பாளரை நியமித்து அவர்கள் மூலம் சர்வே எடுத்துள்ளனர். அந்த சர்வேயில் வயது, சாதி, வேலை மற்றும் வசிப்பிடம் உள்ளிட்ட தகவல்கள் இடம்பெற்றுள்ளன. ஆனால் இந்த சர்வேயில் உள்ள தவறுகளை சுட்டிக்காட்டுவதை விட கட்சியில் நடைபெறும் பிரச்சினைகளை யார் சொல்வார்கள். தவெக தொடர்பான செய்திகள் வெளியே வராமல் தவெகவினர் பேரம் பேசுகின்றனர். மாவட்ட நிர்வாகி ஒருவர் த.வெ.க வாட்ஸ்ஆப் குருப்பில் விஜயை சந்திக்க தேதி கேட்டு 15 நாட்களுக்கு மேலாக அனுமதி கேட்டுக்கொண்டுள்ளோம். ஆனால் ஒரு மூவும் இல்லை என்று புலம்புகின்றனர். சந்திக்க மறுப்பதற்கு இந்த கருத்துக்கணிப்புகள் தான் காரணமா என்றும் வினவியுள்ளனர்.

முழுக்க முழுக்க ஆதவ் டெல்லியுடைய ஆள் - போட்டுடைக்கும் ஜீவசகாப்தன்!

ஒரு அரசியல் கட்சி தொடங்கப்பட்டு, கட்சியின் தலைவர் வெளியே வராமல் 6 சதவீத வாக்குகள் கொண்டிருப்பது ஆச்சரியம் அளிக்கிறது. ஒரு மண்டலத்தில் வேலை பார்த்த நபர் முன்கூட்டியே இது தொடர்பான தகவலை தெரிவித்திருந்தார். மொத்தமாக வரும்போது 3 முதல் 4 சதவீதம் இருக்கலாம் என நினைத்தேன். ஆனால் 6 சதவீதம் வரை வந்துள்ளது. இது தொடர்பாக விசாரித்தபோது 45 வயதுக்கு மேற்பட்டவர்களிடம் கருத்துக்கணிப்பு நடத்த வேண்டாம் என கூறப்பட்டது தெரிய வந்தது. ஏனெனில் முதற்கட்ட சர்வேயின்போது விஜய் கட்சி தொடங்கியுள்ளாரா? என்ற அளவில்தான் அவர்கள் கேள்வி இருந்துள்ளது. இதனால் அந்த வயதினரை விட்டு விட்டு 18 முதல் 45 வரை உள்ளவர்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தியுள்ளனர். இந்த வயது பிரிவினருக்கு சினிமாவில் விஜய் நன்கு பரிச்சயமானவர் என்பதால் சர்வே நடத்தப்பட்டது. இந்த சர்வே முடிவுகளின் அடிப்படையில் கூட்டணி உள்ளிட்ட அனைத்து விவகாரங்களையும் இதை வைத்தே பேச முடியும் என விஜய் நினைத்துள்ளார். இதனால் 18 முதல் 45 வயதுக்கு உட்பட்டோரிடம் மட்டும் 2ஆம் கட்டமாக சர்வே எடுக்கப்பட்டுள்ளது.

விஜய்க்கு என் முழு ஆதரவு உண்டு...... நெல்லையில் நடிகர் பிரபு பேட்டி!

முதுலில் இந்த வாக்கு சதவீதம் ஆச்சரியத்தை அளித்தது. பின்னர் அதனை ஆய்வுசெய்தபோது, அதில் சொல்லப்பட்ட சில விஷயங்கள் ஏற்றுக்கொள்ள கூடிய வகையில் அமைந்திருந்தது. சர்வேயில் பெண்களின் வாக்கு சதவீதம் அதிகம் தெரிவிக்கப்பட்டிருந்தது. உண்மையில் பெண்கள் மத்தியில் விஜய்க்கு அதிக ரசிகர்கள் உள்ளனர். ஆனால் இது தேர்தலில் வாக்குகளாக மாறுமா என்றால் சந்தேகம்தான். இப்போதே 6 சதவீத வாக்குகள் என்றால், தேர்தலின்போது 10 முதல் 12 சதவீத வாக்குகள் வந்துவிடாதா என்ற எண்ணம் விஜய்க்கு வந்திடக்கூடாது. அதனால் தான் இதனை விவாதமாக மாற்றினோம். உங்களுக்கு 6 சதவீத வாக்குகள் இருக்கிறது என நினைத்தால் இதே 6 சதவீதம் இன்னொரு மடங்காக வளராது. பிற கட்சிகள் தேர்தல் வேலை பார்க்கத் தொடங்கும்போது இந்த வாக்கு சதவீதம் தானாகவே குறையதான் வாய்ப்பு உள்ளது. இதனை தாண்டி நீங்கள் 234  தொகுதிகளிலும் பிரச்சாரம் மேற்கொண்டு, மக்களை சந்திப்பது போன்ற வேலைகளில் ஈடுபட்டால் மட்டும் தான் வாக்கு சதவீதம் அதிகரிக்கும். இல்லாவிட்டால் குறையதான் செய்யும்.

இதனிடையே, கருத்துக்கணிப்பு முடிவுகள் தமிழக வெற்றிக்கழகம் கட்சியில் 2 விதமான விவாதங்ளை கிளப்பியுள்ளன. ஒன்று 6 சதவீதம் உள்ள வாக்குகளை அதிகரிக்க என்ன செய்யலாம் என சொல்கின்றனர். மற்றொரு தரப்பினரோ 6 சதவீத வாக்குகள் தான் கிடைத்துள்ளது. இது பெரிய ஏமாற்றம் என தெரிவிக்கின்றனர். இந்த குழப்ப மனநிலை தான் விஜயை அமைதியாக்கி உள்ளது. இதனால்தான் விஜய், கட்சி நிர்வாகிகளை சந்திக்க தயக்கம் காட்டுவதாகவும் கூறப்படுகிறது. மேலும், அதையும் தாண்டி அவருக்கு சில வேலைகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. கடந்த நவம்பர் 9ஆம் தேதி கடைசியாக ஷுட்டிங் நடைபெற்றுள்ளது. பின்னர் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்றுள்ளார். அதன் பின்னர் அவருக்கு எந்த கமிட்மெண்ட்டும் இல்லாத நிலையில், விஜய் கட்சி நிர்வாகிகளை சந்திக்காமல் இருந்து வருகிறார்.

நாகையில் சீமானின் கூடாரம் காலி...தவெக கட்சிக்கு தாவிய 200 பேர்

இதற்கு காரணம் விஜய்க்கு கட்சி நடத்த தெரியவில்லை. அவர் சினிமாவில் ஒரு சூப்பர் ஸ்டார். அவர் தனது படத்திற்கு டிக்கெட் வாங்கும் அத்தனை பேரும் தனக்கு வாக்களிப்பார்கள் என நம்பவைக்கப்பட்டு உள்ளார். கோட் படத்திற்கு புக்மைஷோவில் இத்தனை லட்ச பேர் டிக்கெட் வாங்கியுள்ளனர். அவர்கள் தனக்கு வாக்களிப்பார்கள் என்று விஜய் நம்புகிறார். தவெகவில் இப்போது வரை மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட வில்லை. அக்கட்சியில் பொறுப்பாளர்களாக உள்ளவர்கள், விஜய் மக்கள் இயக்கத்தில் பொறுப்பில் இருந்தவர்கள் ஆவர். ஆளும் கட்சியான திமுக கடந்த சில மாதங்களுக்கு முன்பாகவே தேர்தல் வேலைகளை தொடங்கி மேற்கொண்டு வருகின்றனர். எதிர்க்கட்சியான அதிமுகவில் கீழ்நிலையில் இறங்கி வேலை பார்க்க பெரிய அளவில் கட்டமைப்பு உள்ளது. ஆனால் தவெக-வில் இதுவரை மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்படவில்லை. இந்த பிரச்சினை விஜய்க்கும் தெரியும். ஆனால் புஸ்ஸி ஆனந்த், நிர்வாகிகளின் போனையே எடுப்பது கிடையாது. இதனால் கட்சியினர் மிகுந்த ஆதங்கத்தில் உள்ளனர்.

நடிகர் விஜய் தனது கோவா பயணத்தை தவிர்த்திருக்கலாம் என்றும் தவெகவினர் தெரிவித்துள்ளனர். தனிப்பட்ட நிகழ்வுக்கு அவர் கொடுக்கும் முக்கியத்துவத்தை அரசியல் பணிகளுக்கும் கொடுக்க வேண்டும் என்று தவெகவின் நிர்வாகிகள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. ஆனால் இதனை விஜயிடம் கொண்டு சேர்க்கக்கூடாது என புஸ்ஸி ஆனந்த், ஜான் ஆரோக்கியசாமி ஆகியோர் வேலை பார்த்துக்கொண்டிருக்கின்றனர். ஏனெனில் அவர்களது லாபி வேறு.  விஜய் கண்ணில் 6 சதவித வாக்குகளை காட்டிவிட்டு, இன்னும் 6 மாதத்தில் வேறு ஓரு புள்ளிவிபரத்தை காண்பித்து நீங்கள் தான் அடுத்த முதலமைச்சர் என்று கூறுவார்கள். அவர்கள் சொன்னால் அதை ஏற்றுக்கொள்கிற மனநிலையில் தான் விஜய் உள்ளார்.

அரசியல் கட்சி தொடங்கி இவ்வளவு நாள் ஆகிவிட்ட நிலையில், தனது கட்சியின் வழிகாட்டிகளில் ஒருவரான பெரியார் வைக்கம் போராட்ட நினைவு தினம் வந்தது. அதற்கு ஏதேனும் விஜய் கருத்து தெரிவித்தாரா. அம்பேத்கர் உருவாக்கிய அரசமைப்புச் சட்ட கொண்டாட்டம் குறித்து சமூக வலைதளத்தில் கருத்து பதிவிட்டாரா? இது தொடர்பாக ஊடகங்கள் தற்போது ஏற்படுத்திய அழுத்தம் காரணமாக தவெக நிர்வாகிகள் மத்தியில் கடும் விவாதத்தை கிளப்பி உள்ளது. இதனால் அவர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இது கட்சியின் மக்கள் குறித்த பார்வையையும், சமுகத்தில் அவர்களது பங்களிப்பு என்பதும் வேடிக்கையானது. அவர்களுக்கு இருக்கும் அரசியல் புரிதல் என்து பூஜியம் ஆகும். இவர்களுக்கு கிடைக்கக்கூடிய 6 சதவீத வாக்குகள் என்பது மிகையானது. அதனால் இந்த டேட்டா மீது வருத்தம்தான் உள்ளது. இதனை வெளியிடும்போது விவாதத்தை கிளப்ப நினைத்தோம். அதுபோல விவாதம் ஏற்பட்டுள்ளது.

தவெகவை கட்சி கட்டமைப்பாக ஒழுங்காக மெயின்டெயின் பண்ணி எடுத்துக் கொண்டு போகவில்லை என்றால், நிர்வாகிகள் புலம்புவதற்கு இடம் கிடைக்காது. உங்கள் கட்சியின் நலனுக்காக கட்சி இப்படி செயல்பட வேண்டும் என சொல்லக் கூடியவர்கள் உங்கள் கட்சியின் அறிவிக்கப்படாத மாவட்ட செயலாளர்கள் தான். விஜய் தனது கட்சியை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்துச்செல்வாரா என்றால் கிடையாது. ஏனெனில் தவெக-வுக்கு சொந்தமாக பைலா கிடையாது. திமுகவின் பைலா கிடைக்குமா என்று ஒய்வுபெற்ற நீதிபதிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளனர். அதேபோல், அதிமுகவின் பைலாவாவது கிடைக்குமா என்று முக்கிய வழக்கறிஞர்கள் ஓய்வுபெற்ற நீதிபதியிடம் கேட்டுக்கொண்டுள்ளனர். இன்னும் த.வெ.க கட்சிக்கு அதிகாரப்பூர்வ கொள்கை பரப்பு செயலாளர் நியமிக்கப்படவில்லை. இதில் கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்து, தேர்தல் போட்டியிடப்போவதாக கூறுகின்றனர். தவெக வாக்கு சதவீதத்தை வைத்து பேரம் பேசுவதற்கான கட்சியாக வளர்ந்து வருகிறது. இந்த கட்சி எப்போதும் ஆட்சிக்கு வராது, இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

MUST READ