spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்முதல்வர் ஸ்டாலின் போஸ்டர் மீது தாக்குதல்... மூதாட்டியை தேடும் போலீஸ்..!

முதல்வர் ஸ்டாலின் போஸ்டர் மீது தாக்குதல்… மூதாட்டியை தேடும் போலீஸ்..!

-

- Advertisement -

சென்னையில் மெட்ரோ தூணில் ஓட்டப் பட்டுள்ள முதல்வர் ஸ்டாலின் சுவரொட்டி மீது, முதாட்டி ஒருவர் செருப்பு மற்றும் மண்ணை வாரி வீசும் விடியோ காட்சி, வலைதளத்தில் வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், சம் பலம் நடந்தது, விருகம்பாக்கம், பரணி மஹால் அருகே என்பது தெரிய வந்தது. அருகே உள்ள டீக்கடையில் டீ குடித்து விட்டு செல்லும்போது, மூதாட்டி இத்தகைய செயலில் செயலில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

we-r-hiring

சம்பவம் நடந்த இடம், விருகம்பாக்கம் மற்றும் கே.கே.நகர் காவல் நிலையங்களின் எல்லை பகுதி என்பதால், இரு காவல் நிலையங்களிலும், விருகம்பாக்கம் எம்.எல்.ஏ.. பிரபாகர ராஜா புகார் அளித்துள்ளார். முதாட்டி குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சென்னை மாநகராட்சி பகுதியில் சுவரொட்டி ஒட்ட தடை உள்ள நிலையில், அனுமதியின்றி முதல்வர் ஸ்டாலின் புகைப்படம் அச்சிடப்பட்ட சுவரொட்டி ஒட்டியிருப்பதற்கு கண்ட னம் எழுந்துள்ளது.

இந்த விவகாரம் குறித்து, பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தளபதிவில், ‘‘சென்னை, விருகம்பாக்கம் பகுதியில் உள்ள மெட்ரோ ரயில் தூணில் ஒட்டப்பட்டிருந்த, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் படம் இருந்த சுவரொட்டி மீது, வயதான தாயார் ஒருவர், தனது கோபத்தை வெளிக்காட்டும் விதமாக, செருப்பை எறிந்து, மண் வாரித் தூற்றிய காணொளி, சமூக வலைத்தளங்களில் பரவியது.

பெண்கள், குழந்தைகள், வயது முதியவர்கள் என யாருக்குமே பாதுகாப்பில்லாத ஒரு கேடுகெட்ட ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் மீது, பொதுமக்களுக்குக் கட்டுக்கடங்காத கோபம் இருப்பதைத்தான் இந்த சம்பவம் காட்டுகிறது.

முதலமைச்சருக்கு நெருக்கமானவருக்கு குற்ற வழக்குகள் துறை இயக்குனராக நியமனம் - அண்ணாமலை கண்டனம்

நியாயப்படி, முதலமைச்சர் தனது ஆட்சியைச் சுயபரிசோதனை செய்திருக்க வேண்டும். ஆனால், அதை விடுத்து, காணொளியைத் தனது சமூக ஊடகத்தில் பதிந்த, கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் பிரதீஷ் என்பவரைக் கைது செய்திருப்பதோடு, அந்த மூதாட்டியையும் கைது செய்யத் தேடி வருகின்றனர்.

வழக்குத் தொடுத்திருக்கும் விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகர் ராஜா, கனிமொழி பங்கேற்ற கூட்டத்தில், பெண் காவலரிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட திமுகவினருக்காக, காவல்நிலையத்தில் பஞ்சாயத்து செய்யப்போன கேவலமான வரலாறு கொண்டவர்.

உங்கள் ஆட்சியில், பாலியல் பலாத்காரம் செய்பவன் எல்லாம் வெளியே சுதந்திரமாகச் சுற்றிக் கொண்டிருக்க, சமூக வலைத்தளங்களில் விமர்சனம் செய்பவர்கள் பின்னால் திரிய வெட்கமாக இல்லையா?

கைது செய்யப்பட்ட இளைஞர் பிரதீஷை உடனடியாக, விடுதலை செய்வதோடு, அந்த வயதான தாயார் மீதான வழக்கையும் கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்’’ எனத் தெரிவித்துள்ளார்.

MUST READ