சந்தானம் நடிக்கும் டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
ஆரம்பத்தில் நகைச்சுவை நடிகராக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் சந்தானம். இவர் தற்போது தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். அந்த வகையில் கடைசியாக இவரது நடிப்பில் இங்க நான் தான் கிங்கு எனும் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்தது இவரது நடிப்பில் டிடி நெக்ஸ்ட் லெவல் எனும் திரைப்படம் உருவாகி வருகிறது.

அதாவது நடிகர் சந்தானம் ஏற்கனவே தில்லுக்கு துட்டு 1, தில்லுக்கு துட்டு 2, டிடி ரிட்டன்ஸ் ஆகிய காமெடி கலந்த ஹாரர் திரில்லர் படங்களில் நடித்திருந்தார். இந்த படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. இந்நிலையில் அடுத்ததாக நடிகர் சந்தானம், ஆர்யாவின் தயாரிப்பில் உருவாகும் டிடி நெக்ஸ்ட் லெவல் என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை பிரேம் ஆனந்த் இயக்க இதில் சந்தானத்துடன் இணைந்து கஸ்தூரி, செல்வராகவன், கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது இந்த படத்தின் ஃபர்ஸ்ட் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி சந்தானத்தின் பிறந்தநாளை முன்னிட்டு நாளை (ஜனவரி 21) காலை 10 மணி அளவில் டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.