Homeசெய்திகள்கட்டுரைஆளுநர்களுக்கு காலக்கெடு! உச்சநீதிமன்ற தீர்ப்பில் சொல்லியது என்ன? விளக்கும் வில்சன் எம்.பி.!

ஆளுநர்களுக்கு காலக்கெடு! உச்சநீதிமன்ற தீர்ப்பில் சொல்லியது என்ன? விளக்கும் வில்சன் எம்.பி.!

-

- Advertisement -

ஆளுநர் ரவி ஒவ்வொரு முறையும் தடை கல்லாக இருந்து, தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழக அரசை செயல்பட விடாமல் தடுத்தார் என்று மூத்த வழக்கறிஞர்  வில்சன் தெரிவித்துள்ளார்.

'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டத்திற்கு தி.மு.க. எதிர்ப்பு!

ஆளுநருக்கு எதிரான தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் மசோதாக்கள் மீது நடவடிக்கை எடுக்க காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது தொடர்பாக மூத்த வழக்கறிஞர்  வில்சன் யூடியுப் சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:- செந்தில் பாலாஜி அமைச்சராக இருந்தபோது திடீரென அவரை டிஸ்மிஸ் செய்வதாக ஆளுநர் ஆர்.என். ரவி கடிதம் எழுதினார். அன்றிவுவே அந்த உத்தரவை நிறுத்தி வைப்பதாக அறிவித்தார். இதேபோல் வழக்கு ஒன்றில் அமைச்சர் பொன்முடிக்கு தண்டனை வழங்கப்பட்டதால் அவரது பதவி பறிக்கப்படுகிறது. பின்னர் உச்சநீதிமன்றம் சென்று தண்டனையை நிறுத்தி வைக்கிறார். அவர் மீண்டும் அமைச்சராக பதவி ஏற்றபோது பதவிப் பிரமாணம் செய்து வைக்க மாட்டேன் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி சொல்கிறார். இதனை எதிர்த்து திமுக சார்பில் உச்சநீதிமன்றம் செல்கிறபோது தலைமை நீதிபதி சந்திரசூட், நீங்கள் பதவி பிரமாணம் செய்து வைக்கிறீர்களா? அல்லது நாங்கள் உத்தரவிட வேண்டுமா? என்று கேட்டார். ஆளுநர் ரவி ஒவ்வொரு முறையும் இந்த அளவுக்கு தடை கல்லாக இருந்து, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை செயல்பட விடாமல் தடுத்தார். முதலமைச்சரின் பரிந்துரை அடிப்படையில் தான் ஒரு அமைச்சரை நியமிக்கவோ, நீக்கவோ முடியும். ஆளுநர் தன்னிச்சையாக ஒரு அமைச்சரை நியமிக்கவோ, நீக்கம் செய்யவோ ஆளுநருக்கு அதிகாரம் இல்லை. ஆளுநரின் நடவடிக்கைகள் அனைத்தையும் ஆதாரங்களுடன் நீதிமன்றத்தில் எடுத்து வைத்தோம்.

அமைச்சர் பொன்முடி இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை

தமிழ்நாடு அரசின் 10 மசோதாக்களை நிறுத்தி வைக்க வலியுறுத்தி குடியரசுத் தலைவருக்கு தன்னிச்சையாக ஆளுநர் ஆர்.என்.ரவி கடிதம் எழுதினார். வழக்கிற்காக ஆவணங்களை தயாரித்து குடியரசுத் தலைவருக்கு அனுப்பியதாகவும் அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். 10 மசோதாக்களுக்கும் ஏன் ஒப்புதல் அளிக்க கூடாது என்று அவரே நீதிமன்றத்தில் வாதங்களை முன்வைத்தார். இவவை எல்லாம் ஆளுநருக்கு தேவையற்ற விஷயங்களாகும். மசோதாவை ஏன் பரிசீலிக்கவில்லை. எதற்காக இவ்வளவு நாளாக நிறுத்திவைத்தீர்கள் என்பதற்கும் அவரிடம் பதில் இல்லை. மேலும் மசோதாக்களை நிறுத்தி வைக்க தனக்கு அதிகாரம் இருப்பதாகவும், அதற்கு நேர காலக்கெடு இல்லை என்றும் கூறினார். அதனால் தான் உச்சநீதிமன்றம் தற்போது காலக்கெடு கொடுக்கப்பட்டு உள்ளது. அதன்படி தற்போது சட்டப்பேரவையில் ஒரு மசோதாவை நிறைவேற்றி அனுப்பினால் 30 நாட்களுக்குள் முடிவு எடுக்க வேண்டும். அந்த மசோதாவை ஆளுநர், குடியரசுத் தலைவருக்கு அனுப்பினால 3 மாதத்திற்குள்ளாக முடிவு எடுக்க வேண்டும்.

Supreme Court

உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள இந்த தீர்ப்பை நாடாளுமன்றம் இன்எஃபக்டிவ் ஆக்க முடியாது. இந்த தீர்ப்பை ரத்து செய்ய நாடாளுமன்றத்தால் முடியாது. ஆனால் அதனுடைய அடிப்படைகளை நீக்கம் செய்யலாம். 1935ஆம் ஆண்டு இந்திய அரசு சட்டம் கொணடுவரப்பட்டபோது மசோதாக்கள் மீது முடிவு எடுக்க கால அவகாசம் இருந்தது. 1950ல் அரசியலமைப்பு சட்டம் அமலுக்கு வரும் முன்பாக 2 ஆண்டுகள் அரசமைப்பு சட்டம் மீது விவாதம் நடைபெற்றது. அப்போது ஏன் 30 நாட்கள் கால அவகாசம் தர வேண்டும். முடிந்தவரை வெகு விரைவாக மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கப்படும் என்று அஸ் சூன் அஸ் பாசிபிள் என்று வார்த்தையை சொன்னார்கள். ஆனால் நமது ஆளுநர்கள் அஸ் லாங் அஸ் பாசிபிள் என்று உள்ளனர். அதனால்தான் 30 நாட்கள் என்கிற கால வரையறை கொண்டு வர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

 பழங்குயின மாணவர்களிடையே மருத்துவ படிப்பு குறித்து – ஆளுநர் கேள்வி

இந்த வழக்கு தீர்ப்பு என்பது அளுநர் தொடர்புடைய வழக்காகும். இந்தியாவில் மத்திய மாநில அரசுகளின் உத்தரவுகள் அனைத்தும் குடியரசுத் தலைவர் அல்லது ஆளுநரின் பெயரில் தான் மேற்கொள்ளப்படுகின்றன. அப்படி குடியரசு தலைவர் பெயர் உள்ளதால் நாம் ஒன்றும் செய்ய முடியாது என்பது அரசியலமைப்பு சட்டத்தை முட்டுச்சந்திற்கு கூட்டிச்செல்வது போன்று ஆகிவிடும். குடியரசுத் தலைவர் தங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரத்தை அரசியலமைப்பு சட்டத்தின்படி அவர்கள் செயல்படுத்தவில்லை என்றால், அதற்கு ஒரே பரிகாரம் நீதிமன்றத்தை தான் அணுக வேண்டும். பேரறிவாளன் தண்டனை குறைப்பு விவகாரத்தில் ஆளுநர் கையெழுத்து போட மறுத்துவிட்ட நிலையில், அவர்களை உச்சநீதிமன்றம் சிறையில் இருந்து விடுவித்தது. மேலும், குடியரசுத் தலைவர் கருணை மனுவை தள்ளுபடி செய்தால் உச்சநீதிமன்றத்தில் மேல்முறைடு செய்யலாம், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

MUST READ