நடிகர் சூர்யா தன்னுடைய அடுத்த படம் குறித்து அப்டேட் கொடுத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் நடிப்பின் நாயகன் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் சூர்யா. சமீபகாலமாக இவரது நடிப்பில் வெளியான சில படங்கள் எதிர்பார்த்து வெற்றியை பெறவில்லை. அதில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட கங்குவா படமும் ஒன்று. எனவே நடிகர் சூர்யா இழந்த தன்னுடைய வெற்றியை மீண்டும் பெறவேண்டும் என விடாமுயற்சியுடன் பணியாற்றி வருகிறார். அந்த வகையில் தற்போது கார்த்திக் சுப்பராஜின் இயக்கத்தில் உருவாகியுள்ள ரெட்ரோ படத்தை கைவசம் வைத்துள்ளார். இந்த படம் வருகின்ற மே மாதம் 1ஆம் தேதி திரைக்கு வர தயாராகி வருகிறது. இது தவிர ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் புதிய படம் ஒன்றிலும், வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்திலும் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில்தான் சமீப காலமாக நடிகர் சூர்யா தனது 46வது படத்தை வாத்தி, லக்கி பாஸ்கர் பட இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிக்க உள்ளதாகவும் இதனை சித்தாரா என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி வருகிறது. ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. இந்நிலையில் தான் ரெட்டோ படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகள் கலந்து கொண்ட சூர்யா, தன்னுடைய அடுத்த படத்தின் இயக்குனர் வெங்கி அட்லூரி தான் என்பதையும் இதனை சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தான் தயாரிக்க இருக்கிறது என்பதையும் உறுதி செய்திருக்கிறார். எனவே விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.