ரஜினி- கமல் இணைந்து நடிக்கும் புதிய படம் தொடர்பான லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.
ரஜினி – கமல் ஆகிய இருவரும் பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணையப் போகும் தகவல் வெளிவந்த நாள் முதலே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகிவிட்டது. அதே சமயம் நாளுக்கு நாள் இந்த படம் தொடர்பாக என்ன அப்டேட் வெளிவரும்? என பலரும் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் ஏற்கனவே இவர்களது கூட்டணிலான புதிய படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கப் போகிறார் என பேச்சு அடிபட்டது. ஆனால் லோகேஷ் இந்த படத்தை இயக்கவில்லை எனவும், பிரதீப் ரங்கநாதன் இதனை இயக்க வாய்ப்புள்ளதாகவும் சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே பிரதீப் ரங்கநாதன், லவ் டுடே என்ற மாபெரும் வெற்றி படத்தை இயக்கி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். அடுத்தது நடிப்பில் கவனம் செலுத்தி வரும் இவர், எப்போது படம் இயக்குவார்? என்ற கேள்வியும் சமூக வலைதளங்களில் உலா வருகிறது. அதிலும் தற்போது இவர் ரஜினி – கமல் ஆகிய இருவரையும் சேர்த்து இயக்கப்போகிறார் என்ற தகவல் ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை தந்துள்ளது. இருப்பினும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. இந்நிலையில் ரஜினி – கமலின் புதிய படம் எப்போது தொடங்கும் என்பது தொடர்பான அப்டேட் கிடைத்திருக்கிறது. அதாவது ரஜினி தற்போது ஜெயிலர் 2 படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இதனை அடுத்து ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் ரெட் ஜெயன்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்கப் போவதாக கூறியுள்ளார். அதேபோல் கமல்ஹாசன் அடுத்தது அன்பறிவ் மாஸ்டர்கள் இயக்கத்தில் தனது 237வது படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தம் ஆகியுள்ளார். மேலும் வீர தீர சூரன் படத்தின் இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளதாகவும் ஏற்கனவே தகவல் வெளியானது. ஆகையினால் ரஜினி மற்றும் கமல் ஆகிய இருவரும் தாங்கள் ஏற்கனவே கமிட்டாகியுள்ள படங்களை முடித்துவிட்டு இருவரும் இணைந்து நடிப்பார்கள் என்று நம்பப்படுகிறது. அதற்குள் இந்த படம் தொடர்பான மற்ற அப்டேட்டுகள் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.