இயக்குனர் வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயனின் புதிய படம் குறித்து பேசியுள்ளார்.தமிழ் சினிமாவில் சென்னை 600028, சரோஜா, கோவா, மங்காத்தா ஆகிய படங்களை இயக்கி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் வெங்கட் பிரபு. இவருடைய இயக்கத்தில் கடைசியாக ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ திரைப்படம் வெளியானது. அதைத் தொடர்ந்து இவர் என்ன படம் இயக்கப் போகிறார்? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. அதன்படி இயக்குனர் வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கப்போவதாக சமீபகாலமாக பல தகவல்கள் வெளியாகி எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி வருகின்றன. மேலும் இந்த படம் சிவகார்த்திகேயனின் 26வது படமாக உருவாகும் என்றும் இப்படம் சயின்ஸ் பிக்சன் ஜானரில் எடுக்கப்படும் என்றும் பேச்சு அடிபடுகிறது. அடுத்தது இந்த படத்திற்கு அனிருத் இசையமைப்பார் எனவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் சமீபத்தில் நடந்த நிகழ்வில் கலந்துகொண்ட வெங்கட் பிரபு, இப்படம் குறித்து சில தகவல்களை பகிர்ந்துள்ளார்.
அதன்படி அவர், “சிவகார்த்திகேயன் இதுவரை பண்ணாத கேரக்டராக இருக்கும். கதை முடிந்தது. கதையை சிவகார்த்திகேயனிடம் சொல்லியாச்சு. அவர் மகிழ்ச்சியாக இருக்கிறார். தயாரிப்பாளர்களும் ஹேப்பி. நீங்கள் எதிர்பார்ப்பதை விட இந்த படம் வித்தியாசமானதாக இருக்கும். அப்படித்தான் முயற்சி பண்ணி இருக்கோம். இது கலகலப்பான படமாக இருக்கும்” என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. எனவே இனிவரும் நாட்களில் இப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவரை அவர் பண்ணாத கேரக்டர்…. நீங்க எதிர்பார்ப்பதை விட…. சிவகார்த்திகேயன் படம் குறித்து வெங்கட் பிரபு!
-
- Advertisement -