சிவகார்த்திகேயன் நடிக்கும் பராசக்தி படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.சிவகார்த்திகேயனின் 25 வது படமாக உருவாகி வரும் திரைப்படம் தான் பராசக்தி. இந்த படத்தை பிரபல இயக்குனர் சுதா கொங்கரா இயக்குகிறார். டான் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் இந்த படத்தை தயாரிக்கிறார். ஜி.வி. பிரகாஷ் இதன் இசையமைப்பாளராகவும், ரவி கே. சந்திரன் இதன் ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றுகின்றனர். கடந்த 1965 காலகட்டத்தில் நடந்த இந்தி திணிப்பை மையமாக வைத்து எடுக்கப்படும் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் கல்லூரி மாணவனாக நடிக்கிறார். இவருடன் இணைந்து அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ரவி மோகன் வில்லனாக நடிக்கிறார். இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வரும் நிலையில் படமானது அடுத்த ஆண்டு ஜனவரி 14 அன்று பொங்கல் தினத்தை முன்னிட்டு உலகம் முழுவதும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் இந்த படத்தின் படப்பிடிப்பு மதுரை, சிதம்பரம், இலங்கை, சென்னை போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. சமீபத்தில் இதன் இறுதி கட்ட படப்பிடிப்பு சென்னை, பூந்தமல்லியில் நடைபெற்று வந்ததாக சொல்லப்பட்டது. இந்நிலையில் தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால், இதன் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் நிறைவடைந்து விட்டதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விரைவில் படக்குழுவினர் சார்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது.
- Advertisement -