விஷால் நடிக்கும் புதிய படம் மிக விரைவில் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
நடிகர் விஷால் தற்போது ரவி அரசு இயக்கத்தில் ‘மகுடம்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதற்கு முன்னதாக விஷால் நடிப்பில் ‘மதகஜராஜா’ திரைப்படம் வெளியாகி வெற்றி நடைபோட்டது. இந்த படத்தை சுந்தர்.சி இயக்கியிருந்தார். பல வருடங்களுக்கு பிறகு சுந்தர்.சி – விஷால் கூட்டணியில் வெளியான ‘மதகஜராஜா’ திரைப்படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்த நிலையில் மீண்டும் இந்த கூட்டணி இணையப்போவதாக சொல்லப்பட்டது. இதனை சுந்தர்.சி-யும் உறுதி செய்திருந்தார். மேலும் இவர்களது புதிய படமானது ‘மதகஜராஜா’ படத்தை போல் காமெடி கலந்த ஆக்சன் படமாக உருவாகும் எனவும், படம் தொடங்குவதற்கான முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும் ஏற்கனவே தகவல் கசிந்திருந்தது. அதுமட்டுமில்லாமல் இந்த படத்தின் படப்பிடிப்பை இந்த ஆண்டு இறுதிக்குள் தொடங்கி, அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வெளியிட திட்டமிட்டு வருவதாகவும் பல தகவல்கள் வெளியாகி வந்தன. இந்நிலையில் தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால், சுந்தர்.சி – விஷாலின் புதிய படம் நாளை (அக்டோபர் 14) தொடங்க இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனவே இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும், படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்களின் விவரங்களும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த புதிய படம் விரைவில் தொடங்க இருக்கும் தகவல் அறிந்த ரசிகர்கள், நடிகர் விஷால் தற்போதெல்லாம் படு ஸ்பீடாக வேலை செய்கிறார் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.