spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஆலந்தூர்- வேளச்சேரி 2 மெட்ரோ இணைப்பு சிற்றுந்துகள் நாளை முதல் இயக்கப்படும்

ஆலந்தூர்- வேளச்சேரி 2 மெட்ரோ இணைப்பு சிற்றுந்துகள் நாளை முதல் இயக்கப்படும்

-

- Advertisement -

ஆலந்தூர் முதல் வேளச்சேரி குருநானக் கல்லூரி வரை 2 மெட்ரோ இணைப்பு சிற்றுந்துகள் நாளை முதல் இயக்கப்படும் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

மெட்ரோ இரயில் பயணிகள் தங்களது இருப்பிடத்திலிருந்து மெட்ரோ நிலையத்திற்கு வந்து செல்வதற்கும் மெட்ரோ நிலையத்திலிருந்து அவர்கள் பணி செய்யும் இடத்திற்கு செல்வதற்கும் பல்வேறு இணைப்பு சேவைகளை ஏற்படுத்த சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. அதில் மாநகர் போக்குவரத்துக் கழகத்துடன் இணைந்து , இணைப்பு பேருந்து வசதிகளை ஏற்படுத்துவதற்காக ஆலந்தூர் மெட்ரோ இரயில் நிலையத்திலிருந்து குருநானக் கல்லூரி வரை வரையிலான வரையிலான வழித்தடத்தில் 2 இணைப்பு சிற்றுந்துகள் நாளை ( 14.12.2022 ) முதல் இயக்கப்படவுள்ளதாக சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது .

we-r-hiring

இதுகுறித்து சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளதாவது : மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் 30.11.2021 அன்று பொதுமக்களின் பயன்பாட்டிற்காக சென்னை மெட்ரோ இரயில் நிலையங்களில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு மாநகர் போக்குவரத்து கழகத்தின் 12 இணைப்பு சிற்றுந்துகளின் இயக்கத்தை காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். அதன்படி ஐந்து வழித்தடங்களில் 12 சேவைகள் இயக்கப்படுகின்றன . அதில் சுமார் 13.41 லட்சம் பயணிகள் மற்றும் பொதுமக்கள் பயணம் செய்து வருகின்றனர் .

மாண்புமிகு சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் திரு . உதயநிதி ஸ்டாலின் அவர்கள் 06.08.2022 அன்று அரசினர் தோட்டம் மெட்ரோ இரயில் நிலையத்தில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக , சென்னை மெட்ரோ இரயில் நிலையங்களிலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் 10 இணைப்பு சிற்றுந்துகளின் இயக் கொடியசைத்து தொடங்கி வைத்தார் . இதன் தொடர்ச்சியாக பொதுமக்கள் மற்றும் மெட்ரோ பய வசதிக்காக அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ இரயில் நிலையத்திலிருந்து வேளச்சேரி குருநானக் கல்லூரி வரை ( ஆதம்பாக்கம் காவல் நிலையம் வழியாக ) 2 இணைப்பு சிற்றுந்துகள் நாளை ( 14.12.2022 ) முதல் இயக்கப்படவுள்ளது . இந்த இணைப்பு சிற்றுந்து சேவை திங்கள் முதல் வெள்ளி வரை ஆலந்தூரில் 05:25 மணி முதல் 20:57 மணி வரையிலும் , குருநானக் கல்லூரியில் 05:55 மணி முதல் 21:29 மணி வரையிலும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது . இந்த சேவை 35 நிமிட இடைவெளியில் இயங்கும் , மேலும் பேருந்து நிறுத்தங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ – ரயில்வே நிலையம் சாலை எஸ்.பி மருத்துவமனை – கிழக்கு கரிகுளம் 1 வது தெரு வள்ளலார் செயின்ட் C ஏரிக்கரை தெரு ஜெயலட்சுமி தியேட்டர் பதிய காலனி மெயின் ரோடு – ஆதம்பாக்கம் காவல் நிலையம் கக்கன் பாலம் – பிருந்தாவன் நகர் – சக்தி நகர் பாலாஜி நகர் – புழுதிவாக்கம் ரெயில்வே நிலையம் – வேளச்சேரி ரெயில்வே நிலையம் சென்னை சில்க்ஸ் – வேளச்சேரி பி.எஸ் – தாண்டேஸ்வரம் – காந்தி சாலைகுருநானக் கல்லூரி கிமீ மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் படி மேற்கூறிய இணைப்பு சிற்றுந்து சேவைக்கு விரைவு பேருந்து கட்டணம் செல்லுபடியாகும் . பயணத்திற்கான குறைந்தபட்ச கட்டணம் ரூ . 7,00 மற்றும் அதிகபட்ச கட்டணம் ரூ .15.00 . இதனால் பயணிகளும் பொதுமக்களும் மெட்ரோ நிலையங்களில் இருந்து அவர்களது இருப்பிடம் மற்றும் அலுவலகங்களுக்கு எளிதில் சென்றடைந்து பயன்பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது மேலும் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் இது போன்ற பயணிகள் வசதிகளை தொடர்ந்து செய்து வர உத்தேசித்துள்ளது.

MUST READ