spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுஅதிமுக வழக்கு- எடப்பாடி பழனிசாமிக்கு நோட்டீஸ்

அதிமுக வழக்கு- எடப்பாடி பழனிசாமிக்கு நோட்டீஸ்

-

- Advertisement -

அதிமுக வழக்கு- எடப்பாடி பழனிசாமிக்கு நோட்டீஸ்

தேர்தல் ஆணையம் மற்றும் எடப்பாடி பழனிசாமி 6 வாரத்தில் பதிலளிக்குமாறு டெல்லி உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

edappadi palanisamy

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அங்கீகரிக்கப்பட்டதை எதிர்த்து அதிமுக உறுப்பினர் என்ற முறையில் ராம்குமார் ஆதித்தன், கே.சி.சுரேன் ஆகியோர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தனர். ராம்குமார் ஆதித்தன் தொடர்ந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு நோட்டீஸ் அனுப்பியது டெல்லி உயர்நீதிமன்றம். ராம்குமார் ஆதித்தன் மனுவுக்கு 6 வாரத்தில் பதிலளிக்குமாறு எடப்பாடி பழனிசாமிக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. பழனிசாமியை பொதுச்செயலாளராக அங்கீகரிக்கப்பட்டதை ரத்து செய்ய ராம்குமார் ஆதித்தன் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

we-r-hiring

கடந்த மார்ச் 28 ஆம் தேதி அதிமுக பொதுக்குழு தீர்மானம் செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதையடுத்து அதிமுகவின் எட்டாவது பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டார். தேர்வு செய்யப்பட்டதற்கான சான்றிதழை தேர்தல் ஆணையர்கள் நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கினர் என்பது குறிப்பிடதக்கது.

 

MUST READ