spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்க்ரைம்விஎஒ கொலை வழக்கில் இருநபர் கைது

விஎஒ கொலை வழக்கில் இருநபர் கைது

-

- Advertisement -

விஎஒ கொலை வழக்கில் இருநபர் கைது

தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் ராமசுப்பு மற்றும் மாரிமுத்து ஆகியோர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சித் தலைவர் செந்தில் ராஜ் உத்தரவு போட்டார்.

தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக இருந்த லூர்து பிரான்சிஸ் என்பவர் அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது மணல் கொள்ளையர்களால் கடந்த மாதம் 25ஆம் தேதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

we-r-hiring

லூர்து பிரான்சிஸ் கொலை வழக்கில் இருநபர் கைது

 

 

இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலரை படுகொலை செய்த மணல் கொள்ளையர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என  வருவாய் துறையினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர். இதைத் தொடர்ந்து தூத்துக்குடி புறநகர் டிஎஸ்பி சுரேஷ்  சிறப்பு விசாரணை அதிகாரியாக தென் மண்டல ஐஜி நியமனம் செய்தார்.

இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பரிந்துரையின் பேரில் கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸை படுகொலை செய்த முக்கிய குற்றவாளியான ராமசுப்பு மற்றும் மாரிமுத்து ஆகிய இருவரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.

லூர்து பிரான்சிஸ் கொலை வழக்கில் இருநபர் கைது

 

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பணிந்துறையை ஏற்று மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் செந்தில்ராஜ் கிராம நிர்வாக அலுவலர் கொலை வழக்கில் தொடர்புடைய ராமசுப்பு மாரிமுத்து ஆகிய இருவரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார்.  இதை தொடர்ந்து பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலை அதிகாரிடம் இந்த உத்தரவு ஆணை முறப்பநாடு காவல் நிலைய ஆய்வாளர் வழங்குவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ