Homeசெய்திகள்தமிழ்நாடுகரூர் விவகாரத்தில் அரசு வேலை வழங்கிய உத்தரவு ரத்து: சென்னை உயர்நீதிமன்றத்தின் அதிரடித் தீர்ப்பும் அரசியல்...

கரூர் விவகாரத்தில் அரசு வேலை வழங்கிய உத்தரவு ரத்து: சென்னை உயர்நீதிமன்றத்தின் அதிரடித் தீர்ப்பும் அரசியல் விவாதங்களும்!

-

- Advertisement -

கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்புச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 31 குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்கித் தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு சட்டவிரோதமானது என்றும், அது ஒரு தவறான முன்னுதாரணத்தை உருவாக்கிவிடும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பளித்துள்ளது. இத்தீர்ப்பு தற்போதைய தமிழக அரசியல் களத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.கரூர் விவகாரத்தில் அரசு வேலை வழங்கிய உத்தரவு ரத்து: சென்னை உயர்நீதிமன்றத்தின் அதிரடித் தீர்ப்பும் அரசியல் விவாதங்களும்!

சட்டவிரோதமானது என உயர்நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு
கரூர் சம்பவத்தைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குக் கருணை அடிப்படையில் அரசுப் பணி வழங்கப்பட்டதை எதிர்த்துப் பல்வேறு தரப்பில் பொதுநல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இவ்வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) மற்றும் சட்டப்பூர்வமான விதிகளின் அடிப்படையில்தான் அரசு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட வேண்டுமே தவிர, தன்னிச்சையாக இத்தகைய உத்தரவுகளைப் பிறப்பிக்க முடியாது என்று தெளிவுபடுத்தியுள்ளது.

we-r-hiring

மேலும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 14 மற்றும் 16-வது பிரிவுகளின்படி சமத்துவ உரிமையும், வேலைவாய்ப்பில் பாரபட்சமின்மையும் மீறப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட நீதிபதிகள், அந்த வேலைவாய்ப்பு உத்தரவுகளை முழுமையாக ரத்து செய்து உத்தரவிட்டனர்.கரூர் விவகாரத்தில் அரசு வேலை வழங்கிய உத்தரவு ரத்து: சென்னை உயர்நீதிமன்றத்தின் அதிரடித் தீர்ப்பும் அரசியல் விவாதங்களும்!

அரசியல் விமர்சகரின் அதிரடிப் பார்வை
இந்தத் தீர்ப்பு குறித்து அரசியல் விமர்சகர் மருதைன் அவர்கள் அளித்துள்ள சிறப்புப் பேட்டியில், அரசின் இத்தகைய நடவடிக்கைகள் மற்றும் அரசியல் கட்சிகளின் நிலைப்பாடுகள் குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்,  சட்டவிதிகளை மீறும் போக்கு: கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்குவதற்கான வரையறைகள் மற்றும் தெளிவான உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் உள்ள நிலையில், தகுந்த சட்ட ஆலோசனைகள் இன்றி இதுபோன்ற அறிவிப்புகள் வெளியிடப்படுவது எந்த வகையிலும் சட்டத்திற்கு உட்பட்டது அல்ல என்று அவர் சுட்டிக்காட்டினார்.

பொதுமக்கள் மற்றும் மாணவர்களின் மௌனம்: தமிழகத்தில் முந்தைய காலங்களைப் போல மக்கள் விழிப்புணர்வுடன் போராடும் தன்மை தற்போது குறைந்துவிட்டதாகவும், சமூகம் ஒருவித மெத்தனப் போக்குக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் வேதனை தெரிவித்தார். நீதிமன்றத்தின் இந்த அதிரடித் தீர்ப்பு, தமிழகத்தில் அரசு வேலைவாய்ப்பு வழங்கும் விவகாரங்கள் மற்றும் அரசின் நிர்வாக நடைமுறைகளின் வெளிப்படைத்தன்மை குறித்துத் தீவிர விவாதங்களை மீண்டும் துவக்கி வைத்துள்ளது.

இளைஞர்களின் எழுச்சியும் தமிழக அரசியலின் மௌனமும்: நீட் விவகாரத்தில் வாய்ப்பை நழுவவிட்ட கட்சிகள் – மூத்த பத்திரிகையாளர் ஐயநாதன் பகீர் பேட்டி!

MUST READ