Homeசெய்திகள்தமிழ்நாடுஉடல் உறுப்பு தானத்தில் தமிழ்நாடு முதன்மை மாநிலம்: மத்திய அரசின் உயரிய விருது வழங்கி கௌரவம்!

உடல் உறுப்பு தானத்தில் தமிழ்நாடு முதன்மை மாநிலம்: மத்திய அரசின் உயரிய விருது வழங்கி கௌரவம்!

-

- Advertisement -

புது டெல்லியில் நடைபெற்ற விழாவில் மத்திய இணை அமைச்சர் அனுப்பிரியா பட்டேலிடமிருந்து விருதைப் பெற்றார் அமைச்சர் அருண்ராஜ்!உடல் உறுப்பு தானத்தில் தமிழ்நாடு முதன்மை மாநிலம்: மத்திய அரசின் உயரிய விருது வழங்கி கௌரவம்!

இந்தியாவிலேயே உடல் உறுப்பு தானத்தில் தொடர்ந்து தலைசிறந்து விளங்கி வரும் தமிழ்நாடு, நடப்பாண்டிலும் நாட்டின் மிகச் சிறந்த மாநிலமாகத் தேர்வு செய்யப்பட்டு தேசிய விருதைப் பெற்றுள்ளது.

we-r-hiring

தலைநகர் டெல்லியில் உள்ள அம்பேத்கர் சர்வதேச மையத்தில் (Ambedkar International Centre) நடைபெற்ற சிறப்பு விழாவில், இதற்கான விருதை மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சர் அனுப்பிரியா பட்டேல் வழங்கினார். தமிழ்நாடு அரசின் சார்பில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் இந்த விருதை நேரில் பெற்றுக்கொண்டார்.

தொடர் சாதனையும் விழிப்புணர்வும்
உடல் உறுப்பு தானம் மற்றும் மாற்று அறுவை சிகிச்சைக்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும், உறுப்பு தான முறைகளை மிக வெளிப்படையாகவும் விரைவாகவும் செயல்படுத்துவதிலும் தமிழ்நாடு இந்திய அளவில் தொடர்ந்து முன்னோடி மாநிலமாகத் திகழ்ந்து வருகிறது. மூளைச்சாவு அடைந்தவர்களின் உடல் உறுப்புகளைத் தானமாக வழங்கிப் பல உயிர்களைக் காக்கும் கொடையாளர்களின் குடும்பத்தினரைக் கௌரவித்தல், அரசு மருத்துவமனைகளில் உலகத் தரம் வாய்ந்த உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வசதிகளை வழங்குதல் போன்ற தமிழ்நாடு அரசின் பல்வேறு தொடர் நடவடிக்கைகளுக்குச் சான்றாக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

தேசிய அளவில் பாராட்டு
டெல்லியில் நடைபெற்ற விழாவில், தமிழ்நாட்டின் மருத்துவத் துறை செய்துள்ள இந்தத் வரலாற்றுச் சாதனையைப் பாராட்டிய மத்திய அமைச்சர் அனுப்பிரியா பட்டேல், உறுப்பு தான விழிப்புணர்வில் மற்ற மாநிலங்களுக்கு தமிழ்நாடு ஒரு சிறந்த வழிகாட்டியாகத் திகழ்கிறது எனத் தெரிவித்தார். தேசிய விருதைப் பெற்றதைத் தொடர்ந்து, “இந்த அங்கீகாரம் உறுப்பு தானம் வழங்கிப் பிறர் வாழ்வை ஒளிரச் செய்த கொடையாளர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும், இரவு பகலாக உழைக்கும் மருத்துவத் துறை ஊழியர்களுக்கும் சேரும்” என்று அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார்.

த.வெ.க. அரசின் வரலாற்றுச் சிறப்புமிக்க முதல் பட்ஜெட் ஆகஸ்ட் 5-ல் தாக்கல்: நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் சமர்ப்பிக்கிறார்!

MUST READ