Homeசெய்திகள்மாவட்டம்ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் காய்ச்சலால் அனுமதிக்கப்பட்ட 7 வயது சிறுமி உயிரிழப்பு!

ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் காய்ச்சலால் அனுமதிக்கப்பட்ட 7 வயது சிறுமி உயிரிழப்பு!

-

- Advertisement -

உடலை வாங்க மறுத்து ஆம்புலன்ஸை சிறைபிடித்து உறவினர்கள் விடிய விடிய போராட்டம் — கிராமத்தில் சோகம்!
ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் காய்ச்சலுக்காகச் சிகிச்சை பெறச் சென்ற 7 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். மருத்துவர்களின் அலட்சியமே உயிரிழப்புக்குக் காரணம் எனக் கூறி, ஆம்புலன்ஸ் வாகனத்தைச் சிறைபிடித்துச் சிறுமியின் உறவினர்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் காய்ச்சலால் அனுமதிக்கப்பட்ட 7 வயது சிறுமி உயிரிழப்பு!

காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதி:
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள மேலமுந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் அருள்பாண்டி. இவரது மனைவி அருள்செல்வி. இத்தம்பதியரின் 7 வயது மகள் பிரவீஷா, அப்பகுதியில் உள்ள பள்ளியில் 2-ஆம் வகுப்பு படித்து வந்தார்.

we-r-hiring

இந்நிலையில், நேற்று மாலை சிறுமி பிரவீஷாவுக்குத் திடீரென கடும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், சிறுமியை உடனடியாகக் கடலாடி அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக ராமநாதபுரம் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்குச் சிறுமி அனுப்பி வைக்கப்பட்டார்.

சிகிச்சை பலனின்றி மரணம் — பதற்றம்:
ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட சிறுமி பிரவீஷாவுக்குத் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றிச் சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனைத் தொடர்ந்து, சிறுமியின் உடலைப் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் முறைப்படி விளக்குவதற்கு முன்பாகவே, அவசர அவசரமாக ஆம்புலன்ஸ் மூலமாக மேலமுந்தல் கிராமத்திற்கு மருத்துவமனை நிர்வாகம் அனுப்பி வைத்ததாகக் கூறப்படுகிறது.

ஆம்புலன்ஸ் சிறைபிடிப்பு — போலீசார் பேச்சுவார்த்தை:
மருத்துவமனை நிர்வாகத்தின் இந்த நடவடிக்கையால் ஆத்திரமடைந்த சிறுமியின் பெற்றோர் மற்றும் கிராம மக்கள், உடலைச் சுமந்து வந்த ஆம்புலன்ஸ் வாகனத்தை மேலமுந்தல் கிராமத்திலேயே சிறைபிடித்து முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிறுமியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாகவும், தவறான சிகிச்சையே உயிரிழப்புக்குக் காரணம் என்றும் குற்றம் சாட்டி உடலை வாங்க மறுத்தனர்.

இதுகுறித்துத் தகவல் அறிந்த சாயல்குடி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

பள்ளிக் குழந்தையான 7 வயது சிறுமி காய்ச்சலால் உயிரிழந்த சம்பவத்தால் மேலமுந்தல் கிராமமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

செல்போன் பேசியதாக கண்டித்ததால் கல்லூரி மாடியிலிருந்து குதித்து கேரள மாணவி தற்கொலை!

MUST READ