Homeசெய்திகள்இந்தியா4 மாநில உயர் நீதிமன்றங்களுக்கு புதிய தலைமை நீதிபதிகள்: உச்ச நீதிமன்ற கொலீஜியம் மத்திய அரசுக்குப்...

4 மாநில உயர் நீதிமன்றங்களுக்கு புதிய தலைமை நீதிபதிகள்: உச்ச நீதிமன்ற கொலீஜியம் மத்திய அரசுக்குப் பரிந்துரை!

-

- Advertisement -

ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், ஜம்மு-காஷ்மீர் & லடாக் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய 4 மாநில உயர் நீதிமன்றங்களுக்கு புதிய தலைமை நீதிபதிகளை நியமிக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம் மத்திய அரசுக்கு அதிகாரப்பூர்வப் பரிந்துரை வழங்கியுள்ளது.4 மாநில உயர் நீதிமன்றங்களுக்கு புதிய தலைமை நீதிபதிகள்: உச்ச நீதிமன்ற கொலீஜியம் மத்திய அரசுக்குப் பரிந்துரை!

கொலீஜியம் கூட்டத்தின் பரிந்துரைகள் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமையிலான கொலீஜியம் கூட்டம் ஆகஸ்ட் 31-ஆம் தேதி நடைபெற்றது. அதில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி பின்வரும் நியமனங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன:

we-r-hiring

ராஜஸ்தான் உயர் நீதிமன்றம்: சத்தீஸ்கர் உயர் நீதிமன்ற நீதிபதியாகச் பணியாற்றி வரும் நீதிபதி சஞ்சய் கே. அகர்வால், ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம்: குஜராத் உயர் நீதிமன்ற நீதிபதி அல்பேஷ் யஷ்வந்த் கோக்ஜே, மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் உயர் நீதிமன்றம்: ராஜஸ்தான் உயர் நீதிமன்ற நீதிபதி புஷ்பேந்திர சிங் பாட்டி, ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்கப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். சத்தீஸ்கர் உயர் நீதிமன்றத்திற்குப் புதிய தலைமை நீதிபதிமுன்னதாக ஆகஸ்ட் 6-ஆம் தேதி நடைபெற்ற கொலீஜியம் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு தொடர்பான அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம்: ஒடிசா உயர் நீதிமன்ற நீதிபதி கிருஷ்ண ராம் மொஹபத்ரா, சத்தீஸ்கர் உயர் நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாகப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். சத்தீஸ்கர் உயர் நீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதி வரும் செப்டம்பர் 4-ஆம் தேதி ஓய்வு பெற உள்ள நிலையைத் தொடர்ந்து, அவருக்குப் பதிலாக நீதிபதி மொஹபத்ராவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

கொலீஜியத்தின் இந்தப் பரிந்துரைகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்த பிறகு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் புதிய தலைமை நீதிபதிகள் முறைப்படி பொறுப்பேற்பார்கள்.

குற்றம் சாட்டப்பட்டவர்களில் சிலரை மட்டும் தேர்வு செய்து கைது செய்யக்கூடாது: டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி கருத்து!

MUST READ