திருப்பத்தூர் தொகுதியில் ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளர் சீனிவாச சேதுபதியின் வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் கே.ஆர். பெரியகருப்பன் தாக்கல் செய்த தேர்தல் வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
இரு தர வாதங்களும் முழுமையாக நிறைவடைந்ததை அடுத்து, வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளனர்.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் கடந்த தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் ஆர். சீனிவாச சேதுபதி, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் கே.ஆர். பெரியகருப்பனை விட ஒரே ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டார்.
திமுக வேட்பாளர் தேர்தல் வழக்கு:
மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த தேர்தல் முடிவை எதிர்த்து, திமுக வேட்பாளர் பெரியகருப்பன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்தார்.
அதில், தபால் வாக்குகள் எண்ணப்பட்டதில் முறைகேடுகள் இருப்பதாகவும், குளறுபடிகள் மூலம் தங்களின் வெற்றி பறிக்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
நீதிமன்றத்தில் தீவிர விசாரணை:
இந்த வழக்கு தொடர்பான விசாரணைகள் கடந்த சில மாதங்களாக உயர் நீதிமன்றத்தில் தீவிரமாக நடைபெற்று வந்தது. தேர்தல் ஆணையத்தின் தரப்பு விளக்கங்கள் மற்றும் தவெக எம்.எல்.ஏ. சீனிவாச சேதுபதி தரப்பு வாதங்கள் அனைத்தும் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டன.
இந்நிலையில், இவ்வழக்கின் அனைத்து தரப்பு வாதங்களும் முழுமையாக நிறைவடைந்ததை அடுத்து, வழக்கின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.
ஒரே ஒரு ஓட்டு வித்தியாச வெற்றி வழக்கில் நீதிமன்றத்தின் தீர்ப்பு என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
