spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதாய்க்கு பிறந்த நாள் வாழ்த்து கூறி விட்டு இளம்பெண் தற்கொலை

தாய்க்கு பிறந்த நாள் வாழ்த்து கூறி விட்டு இளம்பெண் தற்கொலை

-

- Advertisement -

தாய்க்கு பிறந்த நாள் வாழ்த்து கூறி விட்டு இளம்பெண் தற்கொலை

கோவை மாவட்டத்தைச் சேர்ந்த போத்தனூர் அருகே உள்ள பிள்ளையார்புரத்தை சேர்ந்தவர் ஜோதிமணி. இவரது மகள் விஜயலட்சுமி (20).  இவர் பத்தாம் வகுப்பு வரை படித்து முடித்து இருந்தார்.

தாய்க்கு பிறந்த நாள் வாழ்த்து கூறி விட்டு இளம்பெண் தற்கொலை
கோயம்புத்தூர்

கடந்த சில மாதங்களுக்கு முன்பு விஜயலட்சுமிக்கு அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறியது. இரண்டு பேரும் ஒருவருக்கொருவர் தீவிரமாக காதலித்து வந்தனர். இந்தக் காதல் விவகாரம் விஜயலட்சுமியின் பெற்றோருக்கு தெரியவந்தது. அவர்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

we-r-hiring

மேலும் வாலிபருடனான காதலை கைவிடுமாறு விஜயலட்சுமியின் பெற்றோர் அறிவுரை கூறினார். இதனால் அவர் கடந்த இரு மாதங்களாக மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார். சம்பவத்தன்று விஜயலட்சுமியின் தாய் தனது மகனுடன் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு சென்றார்.

அப்போது வீட்டில் விஜயலட்சுமி மட்டும் இருந்தார். அவர் செல்போன் மூலமாக தனது தாயை தொடர்பு கொண்டு அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவித்தார். பின்னர் செல்போன் இணைப்பை துண்டித்து விட்டார். இதனால் சந்தேகம் அடைந்த சாந்தி தனது மகளுக்கு செல்போனுக்கு தொடர்பு கொண்டார்.

ஆனால் நீண்ட நேரமாக விஜயலட்சுமி செல்போனை எடுக்கவில்லை. உடனடியாக விஜயலட்சுமி தாயார் சாந்தி தனது உறவினர் ஒருவரை தொடர்பு கொண்டு வீட்டிற்கு சென்று பார்க்குமாறு கூறினார். அவர் சென்று பார்த்த போது விஜயலட்சுமி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

தாய்க்கு பிறந்த நாள் வாழ்த்து கூறி விட்டு இளம்பெண் தற்கொலை
இளம்பெண் தற்கொலை

இந்த சம்பவத்தைப் பார்த்த உறவினர் ஒருவர்  உடனே  சாந்தியிடம் இத்தகவலை தெரிவித்தார்.  இதனைக் கேட்டு அவரது தாய் அதிர்ச்சியடைந்தார். பின்னர் இத்தகவலை தாய் போலீசாருக்கு தெரிவித்தார். இத்தகவல் கிடைத்ததும் போத்தனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

தாய்க்கு பிறந்த நாள் வாழ்த்து கூறி விட்டு இளம்பெண் தற்கொலை
போலீஸ்

பின்னர்  தற்கொலை செய்து கொண்ட விஜயலட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போத்தனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

MUST READ