2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு தமிழ் நாட்டில் உள்ள அனைத்து அட்டைதாரர்களுக்கும் ஒரு கிலோ பச்சை அரிசி, ஒரு கிலோ சர்க்கரையுடன் ரூபாய். 1,000 ரொக்க பணம் கொடுக்க உள்ளதாக முதல்வர் மு. க. ஸ்டாலின் அறிவித்தார்.

கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு முந்தைய பொங்கல் பண்டிகையின் போது தமிழக அரசு (ஆதிமுக) சார்பில் பரிசு பொருட்களுடன் ரூபாய். 2500 ரொக்க பணம் வழங்கப்பட்டது. இது அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஜாக்பாட் ஆக அமைந்தது. மேலும், தேர்தலை ஒட்டி வழங்கப்பட்டதால் வாக்காளர்களான கவனிப்பு என்று விமர்சனங்கள் எழுந்தது.


2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி உதயமானது. திமுக ஆட்சியில் என்ன பரிசு தொகை கிடைக்கும் என்று எதிர்பார்ப்பு மக்களிடையே தொடர்ந்து இருந்துவந்தது.
ஆனால், தமிழக அரசின் நிதி மற்றும் கடன் சுமையை கருத்தில் கொண்ட கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு தமிழக அரசு சார்பில் ரொக்க பணம் வழங்கப்படவில்லை.
அதற்கு பதிலாக கடந்த 2022 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு 21 அத்தியாவசிய பொருட்கள் ஆன பச்சரிசி, வெள்ளம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய், மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, ரவை, கோதுமை, உப்பு மற்றும் பொருட்கள் கொண்ட செல்ல பை முழு கரும்பு என 21 பொருட்கள் அடங்கிய பரிசுபொருட்கள் மக்களுக்கு வழங்கப்பட்டது.

மேலும், வழங்கப்பட்ட அந்த தொகுப்பில் வெள்ளம், பச்சரிசி போன்ற பொருட்கள் தரம் குறைந்து இருந்ததாக மக்களிடம் இருந்து புகார்கள் எழுந்தது.
இதனை அடுத்து வழங்கப்பட்ட பொங்கல் பரிசு தொகுப்பின் தரத்தை சரியாக ஆராய வில்லை என்பதற்காக தமிழ்நாடு குடிமை பொருள் வழங்கல் முதுநிலை தர கட்டுப்பாட்டு மேலாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இவை அனைத்தும் கருத்தில் கொண்டு வரும் 2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு அனைத்து அட்டைதாரர்களுக்கும் ஒரு கிலோ பச்சை அரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ரூபாய். 1,000 பணம் கொடுக்க உள்ளதாக முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்தார்.

வரும் 2023 ஜனவரி மாதம் 2ம் தேதி முதல் பொங்கல் பரிசு தொகையினை அவரவர் பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் பெற்றுக் கொள்ளலாம் என முதலில் மு. க. ஸ்டாலின் அறிவித்தார்.