
நிலவின் தென்துருவப் பகுதியில் ஆக்சிஜன் இருப்பதை ‘பிரக்யான் ரோவர்’ கண்டறிந்துள்ளது.
விக்ரம் பிரபு, விதார்த் கூட்டணியின் ‘இறுகப்பற்று’….. ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்!
நிலவின் தென்துருவப் பகுதியில் வெற்றிகரமாகத் தரையிறங்கிய ‘பிரக்யான் ரோவர்’, தொடர்ந்து நிலவின் மேற்பரப்பில் பயணம் செய்து இஸ்ரோவுக்கு தகவல்களை அனுப்பி வருகிறது.

அந்த வகையில் இன்று (ஆகஸ்ட் 29) இரவு 09.00 மணிக்கு இஸ்ரோ தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பில், “நிலவின் தென்துருவப் பகுதியில் ஆக்சிஜன் இருப்பதை ‘பிரக்யான் ரோவர்’ கண்டறிந்துள்ளது. ரோவரில் இருக்கும் ‘LIBS’ ஸ்பேக்ட்ரோ மீட்டர் உதவியுடன் சல்பர் இருப்பது உறுதிச் செய்யப்பட்டுள்ளது.
போதைப் பொருள் வழக்கு குறித்து வரலட்சுமி சரத்குமார் விளக்கம்!
அதேபோல், நிலவில் அலுமினியம், கார்பன், டைட்டானியம், சிலிக்கான், கால்சியம், இரும்பு போன்ற கனிமங்களும் உள்ளது. ஹைட்ரஜன் குறித்தான தகவல்கள் தேடப்பட்டு வருகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.