Homeசெய்திகள்இந்தியாவழக்கறிஞர்கள், மனுதாரர்கள் கவனமாக இருக்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அறிவுறுத்தல்!

வழக்கறிஞர்கள், மனுதாரர்கள் கவனமாக இருக்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அறிவுறுத்தல்!

-

- Advertisement -

 

ஜல்லிக்கட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு!
File Photo

உச்சநீதிமன்றத்தின் பெயரில் மோசடி நோக்கில் போலி இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், வழக்கறிஞர்களும், மனுதாரர்களும் கவனமாக இருக்குமாறும் எச்சரிக்கை வெளியாகியுள்ளது. இந்த எச்சரிக்கையை உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் வெளியிட்டுள்ளார்.

“விநாயகர் சதுர்த்தி விடுமுறை தேதி மாற்றம்”- தமிழக அரசு அரசாணை!

உச்சநீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை அடையாளம் கண்டு பயன்படுத்த வேண்டும் என்றும், இது தொடர்பான வேறு லிங்குகள் எதுவும் திறக்க வேண்டாம் என்றும், பணப்பரிமாற்றங்கள் எதையும் செய்ய வேண்டாம் என்றும், உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

உச்சநீதிமன்றம் நபர்களின் தனிப்பட்ட தகவல்களையோ, வங்கிக் கணக்கு விவரங்களையோ கேட்பதில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. போலி இணையதளம் மூலம் யாரேனும் பாதிக்கப்பட்டிருந்தால், கடவுச்சொல்களை உடனே மாற்றிவிட்டு, கணக்கு வங்கியைத் தொடர்புக் கொள்ளுமாறு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் 26 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது!

போலி இணையதளம் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் இது தொடர்பான விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

MUST READ