spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாமீண்டும் தீவிர சிகிச்சையில் விஜயகாந்த்.... தீயாய் பரவும் தகவல் உண்மையா?

மீண்டும் தீவிர சிகிச்சையில் விஜயகாந்த்…. தீயாய் பரவும் தகவல் உண்மையா?

-

- Advertisement -

மீண்டும் தீவிர சிகிச்சையில் விஜயகாந்த்.... தீயாய் பரவும் தகவல் உண்மையா?நடிகர் விஜயகாந்த் பல வருடங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்தார். அதே சமயம் கடந்த நவம்பர் 18ஆம் தேதி மார்பு சளி, இருமல் போன்ற பிரச்சனையால் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என்று கூறப்பட்ட நிலையில் திடீரென விஜயகாந்தின் உடல்நிலை சீராக இல்லை என்றும் இன்னும் 15 நாட்கள் விஜயகாந்த்திற்கு சிகிச்சை தேவைப்படுவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அதன்படி கடந்த சில தினங்களாக சிகிச்சை பெற்று வந்த விஜயகாந்த் இரண்டு நாட்களுக்கு முன்பாக உடல் நலம் தேறி வீடு திரும்பியதாகவும் கூறப்பட்டது. இதற்கிடையில் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா விஜயகாந்த், கேப்டன் விஜயகாந்த் அவர்களின் உடல் நலம் நன்றாக இருப்பதாகவும் தேவையில்லாத வதந்திகளை யாரும் பரப்ப வேண்டாம் எனவும் வீடியோ ஒன்றையும், புகைப்படங்களையும் வெளியிட்டு கூறியிருந்தார். ஆனால் சமூக வலைதளங்களில் தொடர்ந்து பல்வேறு வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன.மீண்டும் தீவிர சிகிச்சையில் விஜயகாந்த்.... தீயாய் பரவும் தகவல் உண்மையா?

அந்த வகையில் மீண்டும் விஜயகாந்தின் உடல்நிலை சீராக இல்லை எனவும் அவரின் உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும் சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகிறது. அது மட்டும் இல்லாமல் நுரையீரல் துறை நிபுணர்கள் விஜயகாந்தை கண்காணித்து வருகிறார்கள் என்றும் ஆக்ஸிஜன் உதவியுடன் விஜயகாந்த்திற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

we-r-hiring

எனினும் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. இது சம்பந்தமாக பிரேமலதா விஜயகாந்த் தரப்பிலும் எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை. இருந்த போதிலும் விஜயகாந்த் உடல் நலம் குணமடைந்து வர வேண்டும் என ரசிகர்கள் பலரும் பிரார்த்தனைகளையும், வழிபாடுகளையும் தொடர்ந்து செய்து வருகின்றனர்.

MUST READ