
சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க.வின் தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடலுக்கு திரையுலகினர், அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
விஜயகாந்தின் மறைவுக்கு பிரதமர், உள்துறை அமைச்சர், தேசிய தலைவர்கள் இரங்கல்!
அதன் தொடர்ச்சியாக, தெலுங்கானாவின் ஆளுநரும், புதுச்சேரியின் துணைநிலை ஆளுநருமான டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா ஆகியோர் விஜயகாந்த் உடலுக்கு மாலை அணிவித்து மரியாதைச் செலுத்தினர். அத்துடன், பிரேமலதா விஜயகாந்த் மற்றும் அவரது மகன்களுக்கு ஆறுதலை கூறினர்.
அதேபோல், அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, விஜயகாந்த் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். அத்துடன், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
விஜயகாந்த் மறைவையொட்டி வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா ரத்து..
அதேபோல், முன்னாள் அமைச்சர்களான ஜெயக்குமார், தங்கமணி, உள்ளிட்டோரும் விஜயகாந்த் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர்.